இடைத் தேர்தல் தோல்வி எதிரொலி.. கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் ராஜினாமா
Recommended Video
பெங்களூர்: கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை தினேஷ் குண்டுராவ் ராஜினாமா செய்துள்ளார். மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான இவரது ராஜினாமா காங்கிரசுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
கர்நாடகாவில் நடைபெற்ற 15 சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் 12 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. காங்கிரஸ் வெறும் 2 தொகுதிகளில் மட்டுமே வென்றது. இந்த நிலையில்தான், தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர், தினேஷ் குண்டுராவ்.
நான் முடிந்த அளவுக்கு எனது சக்திக்கும் மீறி தேர்தல் பணியாற்றினேன். இருந்தும்கூட, காங்கிரஸ் தோற்றுள்ளதால், அதற்கு பொறுப்பேற்று எனது ராஜினாமா முடிவை அறிவிக்கிறேன். இதுகுறித்து கட்சி தலைமைக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். கட்சியை வலுப்படுத்த முழு கால நேரத்தையும் அர்ப்பணிப்பு செய்ய உள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக, லோக்சபா தேர்தலின்போதும் காங்கிரஸ் கர்நாடகாவில் படுதோல்வியை சந்தித்தது. எனவே அப்போதே தனது தலைவர் பதவியை தினேஷ் குண்டுராவ் ராஜினாமா செய்தார். இதை காங்கிரஸ் மேலிடம் அப்போது ஏற்கவில்லை. எனவே, இப்போது காங்கிரஸ் தலைமை என்ன முடிவு எடுக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
சோனியா பிறந்தநாள்... காங்.தொண்டர்களுக்கு ஒரு கிலோ வெங்காயம் அன்பளிப்பு
முன்னதாக, தேர்தல் ரிசல்ட் வெளியானதும் இன்று மதியம் நிருபர்களை சந்தித்த, காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான, சித்தராமையா சட்டசபை குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதனால் எதிர்க்கட்சி தலைவர் என்ற அந்தஸ்த்தையும் சித்தராமையா இழக்கிறார்.
அடுத்தடுத்து கர்நாடக காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் ராஜினாமா செய்வது அந்த கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.