ஃபுல் போதை.. கட்டிப்பிடித்து நச்சென்று முத்தம் கொடுத்த இளைஞர்.. ஆஸ்பத்திரியில் அட்மிட்!
Recommended Video
பெங்களூரு: வேண்டாம்னு நண்பர்கள் சொல்லியும் கேட்காமல் முத்தம் கொடுக்க போனார்.. கடைசியில் ஆஸ்பத்திரியில் குத்துயிரும் கொலை உயிருமாக கிடக்கிறார் இளைஞர்!
கன்னடத்தில் ஒரு படம்.. அதில் யானைக்கு ஹீரோ முத்தம் தருவார். இந்த காட்சி அங்கு ரொம்ப பிரபலம் போலும்.
அதனால் பெங்களூருவை சேர்ந்த ராஜு என்ற 24 வயது இளைஞருக்கு இந்த காட்சி அப்படியே மனசில் பதிந்துவிட்டது. அதனால் தானும் அதேபோல யானைக்கு முத்தம் தர ஆசைப்பட்டார்.
வந்துருச்சு கோடை விடுமுறை.. வெளுக்குது வெயில்.. ஃபாரீன் டூர் கிளம்பிய ஸ்டாலின் குடும்பத்தினர்
காட்டுப்பகுதி
இதற்காக நண்பர்களை அழைத்து கொண்டு காட்டுக்கு போய் யானையை பார்த்து முத்தம் தர முடிவு செய்தார். அதன்படி, கர்நாடகா - தமிழ்நாடு எல்லையில் உள்ள காட்டுப்பகுதிக்கு அவர்களுடன் சென்றார். அப்போது அளவுக்கு அதிகமாக தண்ணி அடித்திருந்தார்கள். சிறிது தூரத்தில் அங்கே யானை கூட்டமும் வந்தது.
விபரீதம்
யானைகளை பார்த்ததும், முத்தம் தந்துவிட்டு வருகிறேன் என்று நண்பர்களிடம் சொல்லி யானை கூட்டம் அருகில் செல்ல முயன்றார் ராஜூ. ஆனால் நண்பர்கள் அவரை தடுத்தனர். "வேண்டாம்.. ஏதாவது விபரீதமாகிவிட போகிறது" என்று உஷார் பண்ணினார்கள்.
கட்டிப்பிடித்து முத்தம்
ஆனால் ராஜு கேட்கவே இல்லை. மண்டை நிறைய போதையும் ஏறி இருந்தது. யானை கூட்டத்துக்குள் நுழைந்து விட்டார்.. யானையை கட்டிப்பிடித்து கொண்டு இச்.. இச்சென்று முத்தம் கொடுக்க ஆரம்பித்து விட்டார். தொடர்ந்து யானைக்கு முத்தம் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.
படுகாயம்
அந்த யானைகள் என்ன நினைத்ததோ தெரியவில்லை.. 6 யானைகள் சேர்ந்து ராஜூவை தூக்கி வீசி எறிந்தது. இதில் ஒரு கட்டத்தில், 6 யானைகளால் தூக்கி வீசி எறியப்பட்டார். இதில் ராஜூ மரத்தின் மீது மோதி கீழே விழுந்து இரத்த வெள்ளத்தில் மிதந்தார். பிறகு உடனடியாக பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.