ஆபாச பேச்சு.. கிண்டல்.. 2 வாலிபர்களைப் பிடித்து பிரம்பாலேயே வெளுத்த குடகு போலீஸ்!
பெண்களை கேலி செய்த 2 இளைஞர்கள் போலீசார் தாக்கும் வீடியோ வைரலாகிறது
Recommended Video
பெங்களூரு: பொண்ணுங்களை ஆபாசமாக கிண்டல் பண்ண வேண்டாம்னு வார்னிங் நிறைய முறை பண்ணியாச்சு.. பசங்க கேட்கவே இல்லை.. அதான் 2 பேரை பிடிச்சு அடிச்சு வெளுத்துள்ளனர் போலீசார்!
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் பொல்லிபெட்டாவில் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்லூரி பெண் பிள்ளைகளிடம் இளைஞர்கள் சிலர் வம்பிழுப்பதாக புகார்கள் வந்து கொண்டே இருந்தன.
இந்நிலையில், 2 இளைஞர்கள் காலேஜ் முன்னாடி வந்து கொண்டு, கல்லூரி மாணவிகளை கிண்டல் கேலி செய்ய ஆரம்பித்தனர். வரம்பு மீறிய இந்த செயல்குறித்து கல்லூரி முதல்வர்வரிடம் புகார் போனது. முதல்வரும், இதை பற்றி பொல்லிபெட்டா போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் அளித்தார்.
அங்கு வந்த போலீசார் ஈவ் டீசிங்கில் ஈடுபட்ட 2 இளைஞர்களையும் கைது செய்து போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்றனர். ஸ்டேஷனுக்குள் 2 பேரையும் நிற்க வைத்து பிரம்பால் வெளுக்க ஆரம்பித்துவிட்டனர். ஒரு போலீஸ்காரர் பிரம்பால் இளைஞரை முன்பக்கம் அடிக்க, இன்னொருவர் பின்பக்கம் அடிக்க, வலி தாங்காமல் துடித்து போனார்கள் இளைஞர்கள்.
ஆபாச பேச்சு.. கிண்டல்.. 2 வாலிபர்களைப் பிடித்து பிரம்பாலேயே வெளுத்த குடகு போலீஸ்! pic.twitter.com/7sHjWDFrMk
— Oneindia Tamil (@thatsTamil) June 25, 2019
இளைஞர்கள் இப்படி அடி வாங்கும் காட்சிகளை ஸ்டேஷனில் இருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அதுதான் இப்போது வைரலாகி வருகிறது. விசாரணையில் 2 இளைஞர்களும்ம் கேரள மாநிலம் மலப்புரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும், பெயர் முகமது, ஷெரீப் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஸ்டேட் விட்டு ஸ்டேட் வந்து பெண்களை கேலி செய்த இருவர் சம்பந்தமான விசாரணை நடைபெற்று வருகிறது.