என் நண்பர்களுடனும் ஜாலியா இரு.. வீடியோவை காட்டி மிரட்டிய இளைஞர்.. போலீசுக்கு போன பெண் என்ஜினியர்
பெண் என்ஜினியரை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டார்
Recommended Video
பெங்களூரு: "என் நண்பர்களுடனும் ஜாலியா இருக்கணும்.. இல்லேன்னா நம்ம ஆபாச வீடியோவை இணையத்தில் போட்டு, சந்தி சிரிக்க வெச்சிடுவேன்" என்று மிரட்டிய இளைஞர் மீது பெண் என்ஜினியர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
ஜார்கண்டை சேர்ந்தவர் அங்கூர் குமார். இவர் பெங்களூரு ரூபேனஅக்ரஹாராவில் ஒரு பேங்கில் வேலை பார்த்து வருகிறார். அங்கேயே ரூம் எடுத்து தங்கியும் உள்ளார். கல்யாணம் செய்வதற்காக, மேட்ரிமோனியலில் பதிவு செய்து, தனக்கு பிடித்த பெண்ணையும் அதில் தேடி வந்தார்.
அப்போது, பெங்களூருவில் வசித்து வரும் ஒரு பெண்ணை, குமாருக்கு பிடித்து விட்டது. 18 வயதாகும், அந்த பெண், ஒரு கம்ப்யூட்டர் பெண் என்ஜினியர். இந்த சம்பவம் போன வருடம் நவம்பரில் நடந்தது.
இதற்கு பிறகு அந்த பெண்ணும், குமாரும் போனில் பேசிக் கொண்டனர்.. பிறகு நேரில் சந்தித்தனர்.. அளவுக்கு மீறி காதலித்தனர்.. "உன்னைதான் கல்யாணம் செய்துக்க போகிறேன்" என்று குமார் வார்த்தைக்கு வார்த்தை அந்த பெண்ணிடம் சொல்லியபடியே இருந்தார்.
திருமா கருத்தில் உள்நோக்கம் கற்பிக்காதீர்.. ராஜேந்திர பாலாஜி.. அப்ப கேள்விப்பட்டதெல்லாம் நிஜம்தானா!
ஒரு கட்டத்தில் அந்த பெண்ணுடன் ஜாலியாகவும் இருந்துள்ளார். இந்த சமயத்தில், மகன் ஒரு பெண்ணுடன் சுற்றி திரிவது குமாரின் வீட்டுக்கு தெரியவந்தது. பிறகு பெண்ணை பற்றி விசாரித்தால், அவர் வேறு ஒரு சாதியை சேர்ந்தவர் என்றும், அவர்கள் கலாச்சாரம் தங்கள் குடும்பத்துக்கு ஒத்து வராது என்றும் முடிவு செய்து, அந்த பெண்ணை நிராகரித்தனர். மகனையும் அந்த பெண்ணுடன் பேச வேண்டாம் என்று சொல்லி தடுத்தனர். இதனால் குமாரும் அவர்கள் பேச்சை கேட்டு, பேசுவதை தவிர்த்துள்ளார்.
இதனால் மனம் நொந்த பெண், என்ஜினீயர் பொம்மனஹள்ளி போலீசில் போன மார்ச் மாதம் புகார் செய்தார். இதனடிப்படையில், போலீசார் கைது செய்தனர்.. ஆனால், குமார் ஜாமீனில் வெளியே வந்ததுடன், அந்த பெண்ணுக்கும் குடைச்சலை தர ஆரம்பித்தார். நேரில், போனில் என பலவாறாக இம்சை செய்தார்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பும் போன் செய்து, "எனக்கு வர்ற 22-ந் தேதி பர்த்டே.. அதுக்கு நீ அவசியம் வரணும்.. என் நண்பர்களும் வருவார்கள்.. அவர்களுடன் நீ ஜாலியா இருக்கணும்.. அப்படி இல்லேன்னா, நீயும், நானும் சேர்ந்து எடுத்த ஆபாச வீடியோவை இணையத்தில் போட்டுவிடுவேன்" என மிரட்டினார். இதை கேட்டு பயந்துபோன பெண் என்ஜினீயர் கோனனகுண்டே போலீசில் புகார் செய்யவும், இப்போது குமாருக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.