நிலாவை நோக்கிய பயணத்தில் சிறப்பு.. புவியின் கடைசி வட்டப்பாதைக்கு உயர்த்தப்பட்டது சந்திரயான்-2
பெங்களூரு: நிலவை நோக்கி ஏவப்பட்ட சந்திரயான் 2 விண்கலம் 5வது புவி வட்டப்பாதைக்கு உயர்த்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
நிலவின் தென் பகுதியை ஆராய்ச்சி செய்வதற்காக கடந்த 22ம் தேதி சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.
சந்திரயான் 2 விண்கலம் புவி சுற்றுவட்டப்பாதையில் படிப்படியாக உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், சந்திரயான்-2 விண்கலம் 5வது புவி வட்டப்பாதைக்கு இன்று பிற்பகல் மூன்று மணி 4 நிமிடத்தின் போது உயர்த்தப்பட்டது. இதுதான் புவியின் கடைசி சுற்றுவட்டப்பாதையாகும்.
இதன்பிறகு விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதைக்கு படிப்படியாக உயர்த்தப்பட உள்ளது. வரும் செப்டம்பர் 7ம் தேதி சந்திரயான்-2 விண்கலம் நிலவில் தரையிறங்க வெற்றிகரமாக தரையிரங்க உள்ளது.
செப்டம்பர் 7ம் தேதி நிலவின் தென்பகுதியில் சந்திரயான் 2 வெற்றிகரமாக இறங்கும் போது அந்த நாடும் செய்யாத ஒரு ஆராய்ச்சியை மேற்கொள்ளும் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுவிடும். அதற்கான முழுபணிகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் செய்து வருகிறார்கள்.