பெரிய கட்டிடம்.. பெங்களூர் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து.. தீயணைப்பு வீரர்கள் போராட்டம்!
பெங்களூரில் பிரிஸ்டீஜ் லேக்வியூ ஹாபிடட் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூர்: பெங்களூரில் பிரிஸ்டீஜ் லேக்வியூ ஹாபிடட் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரில் பிரிஸ்டீஜ் லேக்வியூ ஹாபிடட் அடுக்குமாடி குடியிருப்பு மிகவும் பிரபலம் ஆனது ஆகும். பெங்களூரின் வொயிட்பீல்ட் அருகே குஞ்சார் என்ற பகுதியில் இந்த குடியிருப்பு அமைந்துள்ளது. 10க்கும் மேற்பட்ட மாடிகள் கொண்ட கட்டிடம் ஆகும் இது.
இந்த நிலையில் இன்று மாலை பிரிஸ்டீஜ் லேக்வியூ ஹாபிடட் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்பில் அடிப்பகுதியில் உள்ள சில வீடுகள் தீ பிடித்து எரிய தொடங்கி உள்ளது.
மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த அடுக்குமாடி குடியிருப்பை சுற்றி நிறைய வீடுகள் உள்ளது. இது அதிக மக்கள் வசிக்கும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகும். அதேபோல் இந்த குடியிருப்பில் பல நூற்றுக்கணக்கில் மக்கள் வசிக்கிறார்கள்.
Recommended Video
அங்கு தற்போது தீயணைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 4 தீயணைப்பு வாகனங்கள் அங்கே வந்து தீயணைப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.