உடம்பில் ஒட்டுத்துணி கூட இல்லை.. பெண்ணை காரில் இருந்து தூக்கி வீசிய 3 இளைஞர்கள்.. பெங்களூருவில்!
வெளிநாட்டு பெண்ணை துணியின்றி பெங்களூரு இளைஞர்கள் அலைய விட்டுள்ளனர்
பெங்களூரு: நடுராத்திரி, நடுரோட்டில்.. உடம்பில் ஒட்டுத்துணி கூட இல்லாமல்.. வெளிநாட்டு இளம்பெண்ணை நிர்வாணமாகவே காரில் இருந்து தூக்கி வீசியுள்ளனர் 3 பெங்களூர் இளைஞர்கள்!
25 வயது இளம்பெண் அவர்.. கிழக்கு ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்தவர். அந்த பெண்ணுக்கு உடம்பு சரியில்லை.. சிறுநீரக கல் ட்ரீட்மென்ட்டுக்காக டெல்லி வந்திருக்கிறார்.
ஜனவரி 16-ம் தேதி இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது.. சம்பந்தப்பட்ட பெண் டெல்லியில் இருந்து பெங்களூர் வந்ததாக சொல்கிறார்கள். பெங்களூர் டொட்டபல்லபுர ரோட்டில், ஒரு டாக்ஸியில் ஏறியுள்ளார்.. அந்த டாக்ஸியில் ஏற்கனவே 3 இளைஞர்கள் உட்கார்ந்திருந்தனர்.
வெளிநாட்டு பெண் என்று தெரிந்தும் இந்த இளைஞர்கள் வேலையை காட்டி உள்ளனர்.. அந்த பெண்ணிடமிருந்து நகை, பணம், செல்போனை பிடுங்கி கொண்டு, அவரது டிரஸ்களை கழட்ட சொல்லி.. நிர்வாணமாகவே நடுரோட்டில் தூக்கி எரிந்தனர்.. அப்போது நேரம் விடிகாலை 4 மணி! ஆனால் சம்பவம் என்ன என்பது குறித்து இன்னும் முழுமையாக தெரியவில்லை
அந்த நேரத்தில் உடம்பில் ஒட்டுத்துணி கூட இல்லாமல் அந்த பெண்ணுக்கு எங்கே போவது, எப்படி போவது என்றே தெரியவில்லை... புது நாட்டில் வழியும் தெரியாமல் தடுமாறி நடந்தே நிர்வாணமாக சென்றிருக்கிறார்.. பக்கத்தில் ஒரு பண்ணை வீடு இருந்திருக்கிறது.. அவர்களிடம் நிர்வாணமாகவே போய் நின்று, டிரஸ் ஏதாவது இருந்தால் தருமாறு உதவி கேட்டுள்ளார்.
அதன்பிறகு அவர்கள் தந்த உடையை மாற்றிக் கொண்டு, போலீஸ் ஸ்டேஷனுக்கு போய், சம்பந்தப்பட்ட இளைஞர்கள் மீது புகார் தந்தார். போலீசாரும் இது சம்பந்தமான வழக்கு பதிவு செய்து, அந்த இளைஞர்கள் யார், 3 பேர் இருக்கும் டாக்சிஸியில் இந்த பெண் ஏன் போனார்? ஏன் டெல்லியில் இருந்து பெங்களூர் வந்தார் என்ற விசாரணையில் துரிதமாக இறங்கி உள்ளனர்.
சிகிச்சைக்காக பெங்களூரு வந்த வெளிநாட்டு இளம்பெண் நிர்வாணமாக காரில் இருந்து தூக்கிவீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.