பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இதெல்லாம் "பாசக்கார பளார்"... உதவியாளர் கன்னத்தில் விட்ட விவகாரத்தில் சித்தராமையா விளக்கம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    வீடியோவில் வசமாக சிக்கிய சித்தராமையா!-வீடியோ

    பெங்களூர்: பாசத்தின் வெளிப்பாட்டால்தான் எனது உதவியாளரை கன்னத்தில் அறைந்தேன் என கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா விளக்கம் அளித்தார்.

    கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா, தனது உதவியாளர்களுடன் கடந்த புதன்கிழமை மைசூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

    Former CM Siddaramaiah explains why he slaps his aide in Mysuru Airport

    அப்போது வெளியே வந்த சித்தராமையாவிடம் அவரது உதவியாளர் நடனஹள்ளி ரவி, செல்போனை எடுத்து அவரது காதில் வைத்து அதிகாரி இணைப்பில் இருக்கிறார், பேசுங்கள் எனக் கூறினார்.

    இதனால் ஆத்திரமடைந்த சித்தராமையா அவரை கன்னத்தில் அறைந்தார். பொது இடம் என்றும் பாராமல் சித்தராமையா இப்படி நடந்து கொண்ட காட்சிகள் இணையதளத்தில் வைரலானது.

    இது பெரும் சர்ச்சைக்குரியதாகின. இதையடுத்து சித்தராமையா விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில் ரவி எனது மகன் போன்றவர். நீண்டகாலமாக நான் அவருக்கு வழிகாட்டியாக உள்ளேன். அக்கறையினாலும் பாசத்தையும் அதிருப்தியையும் அவர்கள் மீது வெளிப்படுத்துவேன் என தெரிவித்தார்.

    English summary
    Congress leader and former CM Siddaramaiah explains why he slaps his aide in Mysuru Airport after meeting reporters.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X