இதெல்லாம் "பாசக்கார பளார்"... உதவியாளர் கன்னத்தில் விட்ட விவகாரத்தில் சித்தராமையா விளக்கம்!
Recommended Video
பெங்களூர்: பாசத்தின் வெளிப்பாட்டால்தான் எனது உதவியாளரை கன்னத்தில் அறைந்தேன் என கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா விளக்கம் அளித்தார்.
கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா, தனது உதவியாளர்களுடன் கடந்த புதன்கிழமை மைசூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது வெளியே வந்த சித்தராமையாவிடம் அவரது உதவியாளர் நடனஹள்ளி ரவி, செல்போனை எடுத்து அவரது காதில் வைத்து அதிகாரி இணைப்பில் இருக்கிறார், பேசுங்கள் எனக் கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்த சித்தராமையா அவரை கன்னத்தில் அறைந்தார். பொது இடம் என்றும் பாராமல் சித்தராமையா இப்படி நடந்து கொண்ட காட்சிகள் இணையதளத்தில் வைரலானது.
#WATCH: Congress leader and Karnataka's former Chief Minister Siddaramaiah slaps his aide outside Mysuru Airport. pic.twitter.com/hhC0t5vm8Q
— ANI (@ANI) September 4, 2019
இது பெரும் சர்ச்சைக்குரியதாகின. இதையடுத்து சித்தராமையா விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில் ரவி எனது மகன் போன்றவர். நீண்டகாலமாக நான் அவருக்கு வழிகாட்டியாக உள்ளேன். அக்கறையினாலும் பாசத்தையும் அதிருப்தியையும் அவர்கள் மீது வெளிப்படுத்துவேன் என தெரிவித்தார்.