பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிகம் சாப்பிடாதே.. 2 வயது குழந்தையின் வயிற்றில் குத்தி, சூடு வைத்த கொடூர பாட்டி.. பெங்களூரில் ஷாக்!

Google Oneindia Tamil News

பெங்களூரு: பெங்களூரில் அதிகம் சாப்பிடாதே என பேரனை சூடு வைத்து கொடுமைப்படுத்திய பாட்டி மற்றும் சித்தியை போலீஸார் கைது செய்தனர்.

பெங்களூருவில் உள்ள குருனப்பல்பாலையா என்ற பகுதியை சேர்ந்தவர் இம்ரான்பாஷா. கூலித் தொழிலாளி. இவரது மனைவி ஆதிரா. இவர்களுக்கு 5 குழந்தைகள் உள்ளன.

இந்த 5 குழந்தைகளில் 4ஆவது குழந்தை அர்மான் ஷெரீப் (2). இந்த குழந்தைக்கு இயல்பாகவே அதிக உணவு உண்ணும் பழக்கம் உள்ளது. இதனால் தினமும் இவரது பாட்டி முபீனா குழந்தையை அடித்து சித்ரவதை செய்து வந்துள்ளார்.

15 வயசு பிஞ்சு.. முதலில் 55 வயசு தாத்தா.. பிறகு மேஸ்திரி, மாப்பிள்ளையும் சேர்ந்து.. ஷாக் கிருஷ்ணகிரி15 வயசு பிஞ்சு.. முதலில் 55 வயசு தாத்தா.. பிறகு மேஸ்திரி, மாப்பிள்ளையும் சேர்ந்து.. ஷாக் கிருஷ்ணகிரி

குழந்தைக்கு சூடு

குழந்தைக்கு சூடு

அதிகம் சாப்பிடாதே என கூறி குழந்தைக்கு சூடும் வைத்துள்ளார். இந்த வீடியோவை பார்ப்பதற்கே மனம் பதறுகிறது. 2 வயது குழந்தை என்றும் பாராமல் குழந்தையின் தலையில் ஓங்கி கொட்டுகிறார். பின்னர் முதுகில் பட்பட்டென அடிக்கிறார். கன்னத்தில் ஓங்கி அறை விடுகிறார். வயிற்றில் குத்துகிறார்.

பாட்டி

பாட்டி

பாவம் அந்த குழந்தை அழுதப்படியே அந்த இடத்தை விட்டு நகராமல் அடி வாங்கிக் கொண்டே இருக்கிறது. மேலும் மெழுகுவர்த்தியை ஏற்றி அதில் இருந்து விழும் மெழுகை அந்த குழந்தையின் கைகளில் விடுகிறார் அந்த பாட்டி. குழந்தை அலறுகிறது.

வாட்ஸ் ஆப்

வாட்ஸ் ஆப்

இவர் இவ்வாறு துன்புறுத்தியதால் குழந்தையின் கண், வாய், முகம் என அனைத்தும் காயமடைந்தும் வீங்கி காணப்படுகிறது. இந்த கொடுமைகளை அந்த குழந்தையின் சித்தி பாத்திமா வீடியோ எடுத்து தங்கள் உறவினர்களின் வாட்ஸ் ஆப் குழுவிற்கு அனுப்பியுள்ளார்.

கைது

கைது

இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவர்களது வீட்டிற்கு சென்று நியாயம் கேட்டுள்ளனர். மேலும் சிலர் அந்த வீடியோவை போலீஸுக்கு அனுப்பியுள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் முபீனாவையும் அவரது கொடுமைகளை தடுக்காமல் வேடிக்கை பார்த்து ரசித்த பாத்திமாவையும் கைது செய்தனர்.

5 குழந்தைகள்

5 குழந்தைகள்

இதையடுத்து பலத்த காயமடைந்த குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். குழந்தையை இந்த கொடூர ராட்சஷிகளின் பராமரிப்பில் விட்டுவிட்டு அவரது தாய், தந்தை என்னவானார்கள் என தெரியவில்லை. அந்த பாட்டியுடன் ஒரு சிறுமியும் இருந்தார். ஒருவேளை இம்ரானுக்கு 5 குழந்தைகள் என்பதால் கூலி தொழில் என்பதால் இரு குழந்தைகளை பாட்டி வீட்டில் வளர்க்க விட்டார்களா என தெரியவில்லை.

English summary
Grandmother and maternal aunt were arrested in Bengaluru after they attacked a small boy who eats more food.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X