திடீரென வீசிய சூறைக்காற்று.. பெங்களூரை அரை மணி நேரத்தில் புரட்டி போட்ட தீவிர மழை.. வீடியோ!
பெங்களூர்: பெங்களூரில் திடீர் என்று சூறாவளிக்காற்றுடன் மழை பெய்து வருகிறது. யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீர் என்று சூறாவளிக்காற்றுடன் மழை பெய்து வருகிறது.
Recommended Video
கடந்த மூன்று நாட்களுக்கு முன் மேற்கு வங்கத்தில் ஆம்பன் புயல் தாக்கியது. 165 கிமீ வேகத்தில் தாக்கிய இந்த புயல் மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் இடையே கரையை கடந்தது. இதனால் இரண்டு நாட்களுக்கு விடாமல் அங்கு மழை பெய்தது.
இந்த நிலையில் திடீர் திருப்பமாக பெங்களூரில் திடீர் என்று சூறாவளிக்காற்றுடன் மழை பெய்து வருகிறது. அங்கு வானிலை திடீர் என்று மாறியுள்ளது.
வெப்பச் சலனம்.. அடுத்த 48 மணிநேரத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
திடீர் வானிலை
யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீர் என்று சூறாவளிக்காற்றுடன் மழை பெய்து வருகிறது. தொடர்ந்து அரை மணி நேரமாக சூறாவளிக்காற்றுடன் மழை பெய்து வருகிறது.இன்று மதியத்தில் இருந்து பெங்களூரில் கருமையான மேகமூட்டம் நிலவியது. இந்த நிலையில் மதியம் மூன்று மணி அளவில் திடீர் என்று மழை பெய்தது. மழையோடு சேர்த்து கடுமையான சூறைக்காற்றும் வீசியது.
காற்று வேகம்
இதனால் பல இடங்களில் மரம் விழுந்தது. இதனால் பெங்களூரில் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. திடீர் என்று பெய்த மழை காரணமாக மக்கள் உற்சாகம் அடைந்தனர். அதே சமயம் வேகமாக சூறைக்காற்று வீசியதால் மக்கள் அச்சம் அடைந்ததும் குறிப்பிடத்தக்கது. 100 கிமீ வேகத்திற்கும் அதிகமாக பெங்களூரில் மழை பெய்ததாக வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவிக்கிறது.
|
பெரிய குழப்பம்
இது தொடர்பாக இணையத்தில் பலரும் கேள்வி எழுப்ப தொடங்கினார்கள். இப்படி ஒரு மழையை பார்த்தது இல்லை. ஏன் திடீர் என்று இவ்வளவு காற்றுடன் வீசுகிறது. ஆம்பன் புயலுக்கும் இதற்கும் தொடர்பா என்று பலரும் கேள்வி எழுப்ப தொடங்கி உள்ளனர்.
|
புயலா
பெங்களூருக்கு திடீர் என்று புயல் வந்துவிட்டதா என்று பலர் கேள்வி எழுப்பி உள்ளனர். பெங்களூரில் இன்று காலைதான் கடும் வெயில் அடித்தது. தென் மாநிலங்களில் இன்று கடும் வெயில் அடிக்கும் என்று நேற்றே இந்திய வானிலை மையம் அறிவித்தது. அதேபோல் வெயிலும் அடித்தது. ஆனாலும் யாரும் எதிர்பார்க்காமல் தற்போது பெங்களூரில் கனமழை பெய்தது.