திடீர் சூறைக்காற்று.. சூழ்ந்த கரு மேகங்கள்.. பெங்களூரை புரட்டி எடுக்கும் கனமழை!
பெங்களூரில் திடீர் என்று இடி மற்றும் வேகமான சூறை காற்றுடன் மழை பெய்து வருகிறது.
பெங்களூர்: பெங்களூரில் திடீர் என்று இடி மற்றும் வேகமான சூறை காற்றுடன் மழை பெய்து வருகிறது.
ஆம்பன் புயல் மேற்கு வங்கம் மற்றும் ஒடிஸாவை தாக்கியதில் இருந்து தென்னிந்தியாவில் வெப்பம் அதிகரித்து வருகிறது. வெப்பமான தரைக்காற்று வீசுவதால் தென்னிந்தியாவில் அனல் காற்று வீசி வருகிறது. அதேபோல் இன்னொரு பக்கம் வெயிலும் தீவிரமாக அடித்து வந்தது.
இந்த நிலையில் எப்போதும் குளிராக இருக்கும் பெங்களூரிலும் இன்று காலையில் இருந்து வெயில் அடித்தது. 38 டிகிரி செல்ஸியஸ் வரை பெங்களூரில் வெயில் அடித்தது. அங்கு இரண்டு நாட்களுக்கு முன் சூறை காற்றுடன் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பெங்களூரில் திடீர் என்று இடி மற்றும் வேகமான சூறை காற்றுடன் மழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இப்படி தீவிரமாக மழை பெய்து வருகிறது. பெங்களூர் முழுக்க கரு மேகங்கள் சூழ்ந்துள்ளது.
நற்செய்தி.. தமிழகத்தின் 17 மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு
Recommended Video
தமிழர்கள் அதிகம் இருக்கும் பிடிஎம், பொம்மனஹள்ளி, ஜெயநகர், கோரமங்கலா, இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இன்று இரவும் பெங்களூரில் தீவிர மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.