தூத்துக்குடி அருகே 2வது ஏவுதளம்.. சந்திரயான் 3 திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி.. சிவன் பேட்டி
Recommended Video
பெங்களூரு: சந்திரயான் 3 திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என்றும் ராக்கெட் ஏவுதளத்திற்காக குலசேகரப்பட்டினத்தில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளது என்றும் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் தலைவர கே.சிவன் இன்று பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில். ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு மனிதனை அனுப்ப 4 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். தேர்வு செய்யப்பட்டுள்ள விண்வெளி வீரர்களுக்கு ஜனவரி 3 ஆம் வாரத்தில் பயிற்சி தொடங்கும்.
சந்திரயான்-2 திட்டத்தின் கீழ் அனுப்பப்பட்டு சிறப்பாக செயல்படும் ஆர்பிட்டர் தொடர்ந்து 7 ஆண்டுகளுக்கு தகவலை அனுப்பும். லேண்டர் நிலவின் இறங்கு போத வேகமாக சென்று தரையில் மோதியதால், அதை வெற்றிகரமாக தரையிறக்க முடியவில்லை.
இப்போதைக்கு வடகிழக்கு பருவமழை முடியாது.. இனியும் மழை இருக்கு.. வானிலை மையம் நல்ல செய்தி!
சந்திரயான் 3 திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.அடுத்த ஆண்டுஇந்த திட்டம் தொடங்கப்படும். இரண்டாவது ராக்கெட் ஏவுதளத்திற்காக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் 2300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது " இவ்வாறு கூறினார்.