வெற்றிகரமாக இன்று அதிகாலை விண்ணில் பாய்ந்தது இந்தியாவின் ஜிசாட்-30 செயற்கைக் கோள்
Recommended Video
பெங்களூரு: இந்தியாவில் ஒளிபரப்பு மற்றும் தொலைத் தொடர்பு சேவைகளுக்கு பயன்படும் வகையில், இன்சாட்-4ஏ செயற்கைக் கோளுக்கு பதிலாக இந்த ஜிசாட்-30 செயற்கைக் கோள் வெற்றிகரமாக இன்று அதிகாலை விண்ணில் செலுத்தப்பட்டது.
பிரான்சுக்கு சொந்தமான தென்அமெரிக்காவில் உள்ள கயானாவின் கவ்ரவ் ஏவுதளத்தில் இருந்து அதிகாலை 2.35 மணிக்கு அதி சக்திவாய்ந்த ஜிசாட்-30 செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. ஐரோப்பிய முகமையின் ஏரியேன்-5 ராக்கெட் மூலம் சுமார் 38 நிமிடத்தில் இந்த செயற்கைக் கோள் விண்ணில் ஏவப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
ஒளிபரப்பு மற்றும் தொலைத் தொடர்பு சேவைகளுக்கு இதுவரை இன்சாட்-4ஏ செயற்கைக் கோள் பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது இதற்கு பதிலாக அதிக சக்தியுடன் கூடிய ஜிசாட்-30 செயற்கைக் கோள் விண்ணில் ஏவப்பட்டு இருப்பதாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதிபர் டிரம்ப் பதவி நீக்க நடவடிக்கை.. விசாரணைக்கு தயாராகும் செனட் சபை.. கொதிக்கும் டிரம்ப்
3 ஆயிரத்து 357 கிலோ எடை கொண்ட ஜிசாட்-30 செயற்கைக் கோள் DTH, டிஜிட்டல் சேவை உள்ளிட்டவைகளுக்கு உதவும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார். 15 ஆண்டுகள் இயங்கும் வகையில் இந்த செயற்கைக் கோள் வடிவமைக்கப்பட்டு விண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.