கர்நாடகா இடைத்தேர்தல்: 15 தொகுதிகளிலும் தனித்தே போட்டி.. காங்,க்கு குட்பை- தேவகவுடா தடாலடி
Recommended Video
பெங்களூரு: கர்நாடகாவில் நடைபெற உள்ள 15 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்களில் மதச்சார்பற்ற ஜனதா தளம் தனித்தே போட்டியிடும் என்று முன்னாள் பிரதமர் தேவ கவுடா அறிவித்துள்ளார்.
கர்நாடகாவில் 15 சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ல் இடைத் தேர்தல்கள் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. காங்கிரஸ்-ஜேடிஎஸ் எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்கள் நடைபெறுகின்றன.
தங்களது தகுதி நீக்கத்தை எதிர்த்து 17 எம்.எல்.ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. அதனால் அவர்கள் தற்போதைய இடைத்தேர்தல்களில் போட்டியிட முடியாத நிலை உள்ளது.
கர்நாடகாவில் மீண்டும் பரபரப்பு- 15 சட்டசபை தொகுதிகளுக்கு அக். 21-ல் இடைத் தேர்தல்!
இதனிடையே 15 தொகுதிகளிலுமே மதச்சார்பற்ற ஜனதா தளம் தனித்தே போட்டியிடும்; காங்கிரஸுடன் கூட்டணி இல்லை என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா அறிவித்திருக்கிறார். இத்தேர்தலின் மூலம் குமாரசாமி தலைமையிலான அரசை கவிழ்த்தவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் அறிவித்துள்ளது.