கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் ராஜினாமா
பெங்களூரு: கர்நாடகா சட்டசபையில் முதல்வர் எடியூரப்பா இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார். நூலிழை மெஜாரிட்டியுடன் இருக்கும் எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்புவாரா? இல்லையா? என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் ஜேடிஎஸ் -காங்கிரஸ் அரசு கவிழ்க்கப்பட்டு முதல்வராக பாஜகவின் எடியூரப்பா பதவி ஏற்றுள்ளார். எடியூரப்பா தமது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து இன்று சட்டசபையில் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளார். முன்னதாக சபாநாயகர் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 14 பேரை நேற்று அதிரடியாக தகுதி நீக்கம் செய்தார். இதனால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட அதிருப்தி எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்து.
Karnataka: The newly sworn-in Chief Minister BS Yediyurappa arrives at Vidhana Soudha in Bengaluru. He will face a trust vote today. pic.twitter.com/5g7hfKFybE
— ANI (@ANI) July 29, 2019