ராமசந்திர குஹா ஒரு நகர்ப்புற நக்சல்.. நிழல் உலகில் வாழ்பவர்.. கர்நாடகா பாஜக விமர்சனம்
பெங்களூர்: வரலாற்றாசிரியர் ராமசந்திர குஹா ஒரு நகர்ப்புற நக்ஸல் என கர்நாடக பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து பெங்களூரில் போராட்டம் வலுத்து வருகிறது. பெங்களூரில் 144 தடையுத்தரவு போடப்பட்டிருந்தது. இந்த தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட யோகேந்திர யாதவ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூர் டவுன்ஹாலில் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் வரலாற்றாசிரியர் ராமசந்திர குஹா கலந்து கொண்டார். அவர் செய்தியாளர்களிடம் குடியுரிமை சட்டம் குறித்து கண்டனங்களை தெரிவித்தார்.
என்னா கோவம்.. ஆவேசம்.. ரஜினிகாந்த்துக்கு ஆதரவாக கராத்தே தியாகராஜன்.. உதயநிதி ஸ்டாலின் மீது பாய்ச்சல்
அதிர்ச்சி
அவரை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் வலுத்தன. சர்வதேச அளவில் கவனிக்கத்தக்க எழுத்தாளர் ராமசந்திர குஹா கைது செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
|
ட்விட்டர்
வயதானவர் என்றும் பாராமல் அமைதியான முறையில் போராடிய குஹாவை வலுக்கட்டாயமாக போலீஸார் இழுத்து சென்றது பலரது கண்டனத்தையும் பெற்றது. இந்த நிலையில் இதுகுறித்து கர்நாடக பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளது.
சாமானிய மக்கள்
அதில் கேள்வி, பதில் போல் இருந்தது. நீங்கள் யார் என கேட்கப்பட்டிருந்த கேள்விக்கு நான் ராமசந்திர குஹா. நகர்ப்புற நக்சல். முழுவதும் நிழல் உலகில் வாழும் என்னை சாமானிய மக்களுக்கு தெரியாது.
இருப்பை
வன்முறையை தூண்டுவதன் மூலமும் தங்களது எஜமானர்கள் உத்தரவின் பேரில் போராட்டங்களை ஏற்பாடு செய்வதன் மூலம் அவர்கள் தங்கள் இருப்பை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். அவை இப்போது வெளிக் கொணரப்பட்டுள்ளனர்.