கட்டாந்தரையில்.. போர்வை கூட போர்த்திக்காமல்.. தூங்கும் குமாரசாமி.. "தல"க்கு தில்லைப் பாத்தீங்களா!
Recommended Video
பெங்களூர்: கர்நாடக முதல்வர் குமாரசாமி கிராமத்தில் தங்கும் சுற்றுப்பயணத்திட்டத்தை அடுத்து யாதகிரி மாவட்டத்தில் போர்வை கூட இல்லாமல் கட்டாந்தரையில் படுத்துறங்கும் காட்சி சமூகவலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக முதல்வர் எச்டி குமாரசாமியின் செயல்பாடுகள் சில நேரங்களில் பரிதாபத்துக்குரியதாகவும் பல சமயங்களில் சிரிக்கும்படியாகவும் இருக்கும். இது வரை எந்த முதல்வரும் செய்யாத வகையில் பொதுக் கூட்டத்தில் அழுவது போன்ற செயல்களை செய்து வருகிறார்.
இந்த நிலையில் கிராமத்தில் தங்கி பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்கும் கிராம வாஸ்தவ்யா என்ற திட்டத்தை குமாரசாமி தொடங்கியுள்ளார். மாதத்துக்கு 2 அல்லது 4 முறை அது போல் கிராமங்களில் தங்கும் திட்டத்தை மேற்கொள்ளவுள்ளார்.
கிராமத்தில் தங்கும் திட்டம்
அதன்படி யாதவகிரி மாவட்டத்தில் பின் தங்கிய வகுப்பினர் அதிகம் வசிக்கும் சந்திரகி என்ற கிராமத்தில் உள்ள பள்ளி கட்டடத்தில் தங்கியுள்ளார். கிராமத்தினர் முதல்வரை சந்தித்து மனுக்களை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு கட்டாந்தரையில் போர்வை கூட போர்த்தாமல் தூங்கிய காட்சிகள் வைரலாகி வருகிறது.
கேள்வி
கிராமத்தில் குமாரசாமிக்கு சொகுசு வசதிகள் அளிக்கப்படுகின்றன என்றும் அவர் கிராமத்திற்கு வருவதற்கு முன்னர் பள்ளியில் ஒரு கழிப்பறை கட்டப்பட்டது என்றும் இதுதான் கிராமத்தில் தங்கி பணியாற்றுவதா என்றும் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பியிருந்தனர்.
5 நட்சத்திர ஹோட்டல்
இதுகுறித்து சந்திரகி கிராமத்தில் எச்டி குமாரசாமி செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில் 5 நட்சத்திர ஹோட்டலில் தங்கும் ஏற்பாடுகள் எல்லாம் தேவையில்லை. நான் சாலையில் கூட படுத்துறங்குவேன். கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் நான் எப்படி பணியாற்றுவது. சிறிய கழிப்பறைதான் கட்டப்பட்டுள்ளது. இதை நான் போகும் போது என் முதுகில் கட்டியா கொண்டு செல்ல போகிறேன்.
|
அனைத்தும்
இது பள்ளிக் குழந்தைகளுக்கு உதவியாக இருக்க போகிறது. நான் இங்கு சாதாரண பஸ்ஸில்தான் வந்தேன். சொகுசு பேருந்தில் வரவில்லை. பாஜகவிடம் இருந்து நான் எதையும் கற்க விரும்பவில்லை. என்னால் 5 நட்சத்திர ஹோட்டலிலும் தங்க முடியும், ஒரு சிறு குடிசையிலும் தங்க முடியும்.
ரஷ்யா
என் அப்பா தேவகவுடா பிரதமராக இருந்த போது நான் ரஷ்யாவில் உள்ள கிராண்ட் கிரெம்லிங் அரண்மனையில் தங்கியுள்ளேன். நான் அனைத்தையும் பார்த்துவிட்டேன் என்றார். முன்னதாக முதல்வர் குமாரசாமி அரசு வழங்கியுள்ள பங்களாவிலும் தங்காமல் சொந்த பங்களாவிலும் தங்காமல் 5 ஸ்டார் ஹோட்டலில் தங்கியுள்ளது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய நிலையில் கட்டாந்தரையில் படுத்துறங்கியது மூலம் தான் எத்தனை சிம்பிளிசிட்டி என்பதை எதிர்க்கட்சிகளுக்கு முதல்வர் காட்டிவிட்டதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.