இது சட்ட விரோதம்.. சீறும் கர்நாடக காங்கிரஸ் தலைவர்
Recommended Video
பெங்களூர்: குமாரசாமி அரசுக்கு கெடு விதித்த ஆளுநரின் செயல்பாடு சட்ட விரோதமானது என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் குற்றம்சாட்டியுள்ளார்.
இன்று பிற்பகல் 1.30 மணிக்குள் குமாரசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் நேற்று இரவோடு இரவாக கடிதம் எழுதியிருந்தார். இதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் குமாரசாமி அரசு வழக்கு தொடர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தினேஷ் குண்டுராவ் கூறியுள்ளதாவது: இதே ஆளுநர், கடந்த ஆண்டு, எடியூரப்பா அரசு, தனது பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் கொடுத்தார். குதிரை பேரம் நடத்த போதுமான நேரம் ஒதுக்கியதாகத்தான் இதை பார்க்க முடியும்.
This same Governor had given @BSYBJP 15 days to prove his majority last year, ample enough time to do horse trading.
— Dinesh Gundu Rao / ದಿನೇಶ್ ಗುಂಡೂರಾವ್ (@dineshgrao) July 19, 2019
Now he’s issuing illegal directions to our CM.
Does it not raise questions about the integrity of the Governors office??
https://t.co/hLfjTDS0xU
ஆனால் இப்போது அவர் எங்கள் முதல்வருக்கு சட்டவிரோதமான உத்தரவை வழங்குகிறார். இது கவர்னர் அலுவலகத்தின் நேர்மை குறித்து கேள்விகளை எழுப்பவில்லையா ?? இவ்வாறு அவர் ட்வீட் செய்துள்ளார்.