பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கர்நாடகா டிஜிபி மார்பில் பாய்ந்த 2 குண்டுகள்.. கைத் துப்பாக்கியை சுத்தம் செய்தபோது விபரீதம்

Google Oneindia Tamil News

பெங்களூரு: கர்நாடகா டிஜிபி ஆர்.பி. சர்மாவின் கைத் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் அவரது மார்பில் 2 குண்டுகள் பாய்ந்தன. இதனையடுத்து அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கர்நாடகா மாநில வீட்டு வசதி வாரிய தலைவராக பதவி வகித்து வருபவர் டிஜிபி ஆர்.பி. சர்மா. அவர் தமது வீட்டில் கைத்துப்பாக்கியை புதன்கிழமை மாலை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தார்.

Karnataka DGP RP Sharma gets shot by his own gun

அப்போது திடீரென கைத்துப்பாக்கி அடுத்தடுத்து வெடித்ததில் அவரது மார்பில் 2 குண்டுகள் பாய்ந்தன. இதனையடுத்து சர்மாவின் குடும்பத்தினர் அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.

கர்நாடகா அரசுக்கு சவால்விடும் போதை மருந்து கடத்தல் கும்பல்- ஒழிக்கப்படுவது எப்போது சாத்தியம்?கர்நாடகா அரசுக்கு சவால்விடும் போதை மருந்து கடத்தல் கும்பல்- ஒழிக்கப்படுவது எப்போது சாத்தியம்?

கைத் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததால்தான் இச்சம்பவம் நிகழ்ந்திருக்கிறது; தற்கொலை முயற்சிக்கு என எடுத்துக் கொண்டாலும் கூட சர்மா போன்ற அனுபவம் வாய்ந்தவர்கள் 2 குண்டுகளால் சுடுவதற்கு முயற்சிக்க மாட்டார்கள் என்கின்றனர் போலீஸ் அதிகாரிகள்.

இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஆர்பி சர்மா பணி ஓய்வு பெற இருந்த நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Karnataka DGP RP Sharma suffered two bullet injuries on Wednesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X