கடைசியில் எல்லோரும் சாகத்தான் போகிறோம்.. நினைவிருக்கட்டும்.. சட்டசபையில் அதிர்ந்த டி.கே சிவக்குமார்
கர்நாடகாவில் காங்கிரஸ் - மஜத ஆட்சி நீடிக்குமா என்று குழப்பம் நிலவி வரும் நிலையில் காங்கிரஸ் மூத்த உறுப்பினர் டி கே சிவக்குமாரின் பேச்சு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
பெங்களூர்: கர்நாடகாவில் காங்கிரஸ் - மஜத ஆட்சி நீடிக்குமா என்று குழப்பம் நிலவி வரும் நிலையில் காங்கிரஸ் மூத்த உறுப்பினர் டி கே சிவக்குமாரின் பேச்சு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் - மஜத ஆட்சிக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மாலைக்குள் கண்டிப்பாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் என்று அம்மாநில சட்டசபை சபாநாயகர் கூறி இருக்கிறார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 13 பேர் மற்றும் மஜத எம்எல்ஏக்கள் 3 பேர் பதவி விலகியதை அடுத்து அம்மாநில அரசு கவிழும் நிலைக்கு சென்றது. கர்நாடக சட்டசபையின் பலம் 225. இங்கு பெரும்பான்மை பெற 113 எம்எல்ஏக்கள் தேவை.
இல்லை
இப்போது காங்கிரஸ் - மஜதவில் இருந்து 16 பேர் ராஜினாமா செய்துள்ளதால், அந்த கூட்டணி பெரும்பான்மையை இழந்து இருக்கிறது. காங்கிரஸ் - மஜத கூட்டணி பலம் 102 ஆக குறைந்துள்ளது. ஆனாலும் இப்போது வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த விடமால் குமாரசாமி காலம் தாழ்த்தி வருகிறார். வியாழக்கிழமையில் இருந்து இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் தொடர்ந்து நடந்து வருகிறது.
என்ன பேசினார்
இந்த நிலையில் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் இன்று காங்கிரஸ் மூத்த உறுப்பினர் டிகே சிவக்குமார் பேசினார். அதில், என்னை பாஜகவினர் ஏமாற்றவில்லை. அவர்கள் மீது நான் குற்றம் சொல்ல மாட்டேன். என்னை ஏமாற்றியது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சில எம்எல்ஏக்கள்தான். மும்பையில் உள்ள அவர்கள்தான் என் முதுகில் குத்தியது.
கவலை இல்லை
ஆனால் நான் அதற்கு கவலை பட மாட்டேன். என்னை அவர்கள் முதுகில் குத்தியது போலத்தான் உங்களையும் குத்துவார்கள். அவர்களால் அமைச்சர்கள் ஆக முடியாது. குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் உங்களை ஏமாற்ற போகிறார்கள்.
பாஜக எப்படி
பாஜகவை யாரோ நன்றாக ஏமாற்றி இருக்கிறார்கள். நான் மும்பையில் அதிருப்தி எம்எல்எங்களுடன் பேச சென்றேன். அதில் ஒரு எம்எல்ஏ என்னிடம் சொன்னார், சீக்கிரம் வந்து என்னை கூட்டி செல்லுங்கள் என்று அவர் என்னிடம் கூறினார். இப்படித்தான் அங்கு பல பேர் இருக்கிறார்கள்.
என்ன முடியும்
நான் நினைத்து இருந்தால் எல்லாம் காங்கிரஸ் எம்எல்ஏக்களையம் அடைத்து வைத்திருக்க முடியும். ஏன் என்னால் ஒரு 5 பேரை அடைத்து வைத்திருக்க முடியாது என்று நினைக்கிறீர்களா? ஆனால் நான் செய்யவில்லை. அந்த அதிருப்தி எம்எல்ஏக்களை இங்கே அழைத்து வாருங்கள். அவர்களை அரசுக்கு எதிராக வாக்களிக்க வையுங்கள் பார்க்கலாம்.
மரணம்
இது எல்லாம் எங்கே போய் முடிய போகிறது என்று எனக்கு தெரியும். நினைவிருக்கட்டும், கடைசியில் நாம் எல்லாம் சாகத்தான் போகிறோம். ம்ம் இந்த சண்டையில் எல்லாம் என்ன அர்த்தம் இருக்கிறது. கடைசியில் வேண்டுமானால் சிலர் கூடுதலாக ஒரு பாட்டில் மது அதிகம் குடிப்பார்கள். அவ்வளவுதான், வேறு என்ன நடக்கும், என்று சிவக்குமார் பேசியுள்ளார்.