கர்நாடகத்தில் 15 அடி ஆழ போர்வெல்லில் விழுந்த இளைஞர் பாதுகாப்பாக மீட்பு
பெங்களூர்: கர்நாடக மாநிலம் உடுப்பியில் 15 அடி ஆழ குழியில் விழுந்த இளைஞர் பல மணிநேர போராட்டங்களுக்குப் பின்னர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் பிந்தோர் அருகே உள்ளது மரவந்தே கிராமம். இந்த கிராமத்தில் விவசாய நிலத்தை சுற்றி போர்வெல் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த போர்வெல் குழியில் இன்று காலை யாரோ ஒருவர் விழுந்துவிட்டார். தகவலறிந்த தீயணைப்பு படையினர் அவரை மீட்க சம்பவ இடத்திற்கு சென்றனர்.
அவர்கள் அந்த குழிக்கு பக்கத்தில் இன்னொரு பள்ளத்தை தோண்டினர். ஆனால் எதிர்பாராதவிதமாக அந்த பள்ளம் சரிந்தது. இதனால் 15 அடி ஆழ பள்ளத்தில் விழுந்த இளைஞரை வேறு வழியில் மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
#UPDATE Karnataka: Rohith, the man who had fallen into a 15-feet deep hole in Udupi district has been rescued. https://t.co/yz42yjlMsD pic.twitter.com/hN0dlA94dV
— ANI (@ANI) February 16, 2020
இப்படியான பல மணிநேரப் போராட்டத்துக்குப் பின்னர் அந்த இளைஞர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார். போர்வெல் குழியில் இருந்து மீட்கப்பட்ட இளைஞர் உற்சாகமாகவும் காணப்பட்டார். இதனால் அப்பகுதியே நிம்மதி பெருமூச்சுவிட்டது.