காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து.. நைஸாக உள்ளே புகுந்து.. யாருன்னு பார்த்தீங்களா.. பரபர வீடியோ
வீட்டிற்குள் குதித்து நாயை கவ்விக் கொண்டு ஓடும் சிறுத்தையின் வீடியோ வைரலாகிறது
Recommended Video
பெங்களூரு: காம்பவுண்ட் சுவரை தாண்டி.. வீட்டிற்குள்ளேயே புகுந்து.. லபக்கென தூக்கி கொண்டு தாவி ஓடுவது என்ன என்று தெரிகிறதா... பயங்கரமான சிறுத்தையேதான்!
கொஞ்ச நாளைக்கு முன்னாடி, குஜராத் மாநிலம் கிர் காட்டுக்கு அருகில் ஜுனாகத் என்ற நகரத்தில் நான்கைந்து சிங்கங்கள் நள்ளிரவில் நடுரோட்டில் நடந்து வந்த வீடியோ ஒன்று வெளியானது.
இதை பார்த்த அந்த பகுதி மக்கள் அலறி அடித்து கொண்டு ஓடினர். இதற்கு வனத்துறையினர், "பக்கத்தில காடு இருக்கு இல்லே.. அதான் இப்படி இரை தேடி அடிக்கடி ஊருக்குள் வந்துவிடும்.. காலைல ஆயிடுச்சுன்னா காட்டுக்குள்ளே போயிடும்" என்று சொன்னார்கள்.
இந்நிலையில், கர்நாடகா மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தில் சிறுத்தை ஒன்று வந்துவிட்டது. திர்தாஹலி பகுதியில் ஒரு வீட்டின் சுற்றுப்புற சுவரை ஒரே தாவாக தாவிக் குதிக்கிறது அந்த சிறுத்தை. அந்த வீட்டில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சியில் இது தெளிவாக பதிவாகி உள்ளது.
வீட்டின் காம்பவுன்ட் சுவருக்குள் சிறுத்தை தாண்டி குதித்து, வீட்டிற்குள் நுழைகிறது. அங்கே வீட்டு வாசலில் காவலுக்கு கட்டி போட்டிருந்த நாயை, லபக்கென கவ்விக் கொண்டு, வந்தவழியே சிறுத்தை மீண்டும் டைவ் அடித்து ஓடிவிடுகிறது.
அசால்ட்டாக சிறுத்தை வீட்டிற்குள்ளேயே புகுந்து நாயை அடித்து இழுத்து செல்லும் இந்த வீடியோவை நிறைய பேர் ஷேர் செய்து வருகிறார்கள்.