பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜோதி மீது சந்தேகம்.. வீட்டை விட்டு வெளியே போன கணவர்.. கோபத்தில் மகளுடன் மாடியிலிருந்து இறந்த மனைவி

20வது மாடியில் இருந்து குழந்தையுடன் குதித்து தாய் தற்கொலை செய்து கொண்டார்

Google Oneindia Tamil News

பெங்களூர்: மனைவி ஜோதியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன் கோபித்துக்கொண்டு சென்றுவிட்டதால், ஆவேசம் அடைந்த மனைவி, 20-வது மாடியில் இருந்து தன் குழந்தையுடன் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை தந்துள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் வசித்து வந்தவர் ஜோதி. வயது 28 ஆகிறது. மாடல் தொழிலில் ஈடுபட்டு வந்தவர். இவருக்கு பங்கஜ் என்பவருடன் 10 வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 7 வயதில் ஷபுனா என்ற மகள் இருக்கிறார்.

Mother jumps to death with 7 year old daughter

ஆனால் ஜோதி மாடலிங் செய்வது பங்கஜுக்கு பிடிக்கவில்லை. இதனால் தம்பதிக்குள் அடிக்கடி சண்டை வந்து கொண்டே இருந்தது. சில நாட்களுக்கு முன்பும் இப்படித்தான் தகராறு வந்தது. அதனால் பங்கஜ், கோபித்து கொண்டு வீட்டை விட்டு போய்விட்டார்.

மிசாவுக்கு மத்தியில் முகிழ்த்த காதல். ஸ்வராஜை சுஷ்மா கைப்பிடித்த அந்த திரில் தருணம்! மிசாவுக்கு மத்தியில் முகிழ்த்த காதல். ஸ்வராஜை சுஷ்மா கைப்பிடித்த அந்த திரில் தருணம்!

மறுநாள் காலையும் அவர் வீடு திரும்பவே இல்லை. இதனால் பயந்துபோன ஜோதி, பங்கஜுக்கு போன் செய்தார். ஆனால் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் ஆத்திரமும், விரக்தியும் அடைந்த ஜோதி, தான் வசித்து வரும் அபார்ட்மெண்ட்டின் 20வது மாடியில் மொட்டை மாடிக்கு குழந்தையை தூக்கி சென்று, அங்கிருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார்.

இதை பார்த்த அபார்ட்மென்ட் வாட்ச்மேன் உடனடியாக போலீசுக்கு சொல்லவும், இது சம்பந்தமான விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

English summary
Bengaluru Young Mother jumps off 20th floor with her 7 year old daughter due to family issue
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X