பெங்களூரில் பேய் மழை.. இரு ஏரிகள் உடைப்பு.. காட்டாறு போல் காட்சியளிக்கும் மாநகரம்!
பெங்களூரு: பெங்களூரில் வரலாறு காணாத கனமழை கொட்டி வருகிறது. பெங்களூரே வெள்ளத்தால் மிதக்கிறது.
நேற்று முன் தினம் பெய்த மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி வீடுகள் மிதக்கின்றன. வாகனங்கள் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டன.
முன்னெப்போதும் காணாத அளவுக்கு நகரெங்கிலும் வெள்ளப்பெருக்கு உள்ளது.
|
வெள்ளப்பெருக்கு
பெங்களூரே மிதக்கிறது. முன்னெப்போதும் காணாத அளவுக்கு நகரெங்கிலும் வெள்ளப்பெருக்கு.
|
பிம்மன்கட்டே ஏரி
ராஜராஜேஸ்வரி நகரில் இருக்கும் பிம்மன்கட்டே ஏரி உடைத்துக் கொண்டு ஆர்ப்பரித்து பொங்கி எழும் வெள்ளப்பெருக்கு. மழையால் உடைந்த இரண்டாவது ஏரி இதுவாகும். முதலில் ஒசகெரேஹள்ளி ஏரி உடைந்தது.
|
வெள்ளநீர்
தெற்கு பெங்களூருவில் ஜெயநகர் 3ஆவது பிளாக்கில் ஆறு போல் பாயும் வெள்ளநீர்.
|
கனமழை
ஏரிகளை ஆக்கிரமித்தோம். கான்கிரீட் கட்டடங்களை எழுப்பினோம். மழை நீர் பூமியில் செல்ல வழி ஏற்படுத்தவில்லை. மதிப்பில்லாத மழை நீரை சேமிக்கவும் இல்லை, இப்போது இந்த கனமழையால் அவதியடைகிறோம்.
|
பதவிக்காலம்
இந்த மாநகராட்சியாளர்களின் பதவிக்காலம் தற்போதுதான் முடிவடைந்தது. விரைவில் அவர்களது கடந்த 5 ஆண்டு சாதனைகளை பட்டியலிட்டபடி வந்து வாக்கு சேகரிப்பார்கள். அப்போது இந்த வெள்ளப்பெருக்கு பட்டியலில் இருந்து மிஸ்ஸாகியிருக்கும் என்கிறார் இந்த வலைஞர்.