எல்லாத்துக்கும் என்கிட்ட வீடியோ இருக்கு.. நெத்தியடி இல்லை.. நித்தியடி தருவோம்.. நித்தியானந்தா அதிரடி
பெங்களூர்: "என் மேல பாலியல் புகாரா தர்றீங்க? எல்லாத்துக்கும் என்கிட்ட வீடியோ இருக்கு.. பல விஷயங்களில் ஜெயித்தவன் நான்.. நெத்தியடி இல்லை.. நித்தியடி தர சீடர்கள் முன்வர வேண்டும்" என்று பஞ்ச் வசனங்களுடன் நித்தியானந்தா புதிதாக வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
ஏகப்பட்ட வழக்குகளில் சிக்கி உள்ள நித்யானந்தாவை, நம் போலீசார், வலைவீசி தேடி வருகின்றனர். இன்டர்போல், சிபிஐ உதவியுடன் விரைவில் கைது செய்வோம் என்றும் கர்நாடக போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, தன்னை யாராலும் கைது செய்ய முடியாது என்று நித்யானந்தாவே வீடியோ வெளியிட்டு சவால் விடுத்துள்ளார். இதை தவிர தினம் ஒரு வீடியோவும் வெளியாகி வருகிறது.
ஒவ்வொரு வீடியோவிலும் ஒவ்வொரு விஷயத்தை சொல்லி ஆச்சரியத்தையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி வருகிறார். அந்த வகையில், தன் மீதான பாலியல் புகார் சம்பந்தமாக நித்யானந்தா புதிய வீடியோவில் பேசியுள்ளார். இவர்மீது கடத்தல், பாலியல் வழக்குகள் உள்ள நிலையில், இதை பற்றி நித்யானந்தாவே பேசிஉள்ளார்..
நல்லவர்கள் கையில் உள்ளாட்சி பதவிகள்.. ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஆதரவு கேட்டு ஓபிஎஸ் ஈபிஎஸ் அறிக்கை
"பாலியல் பலாத்கார வழக்கில் என்னை போலீசார் கைது செய்த சமயத்தில், அதற்கான காரணத்தை அவர்கள் சொல்லவில்லை.. கைது செய்த பிறகே புகார் தருபவர்களை கூவி கூவி போலீசார் தேடினர். 2002-ல் இருந்து என் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வும் வீடியோவாக பதிவாகி உள்ளது.
அதனால் என் மீதான பாலியல் புகார்கள் தந்தாலும் அவை, எடுபடாமலேயே போய்விடும். அப்படி யாராவது பாலியல் புகார் தந்தால், 2002-க்கு முன்பு நிகழ்ந்த குற்றம் என்று புகார் கொடுங்கள்.
நான் எத்தனையோ விஷயங்களில் ஜெயித்த போராளி... நெத்தியடி என்பது போல் நித்தியடி என்ற டிரண்ட் உருவாகி விட்டது.. என் சீடர்கள் நித்தியடி தர வேண்டும்" என்று அதிர வைத்துள்ளார்.