விக்ரம் லேண்டரை கூகுளில் தேடிய பாகிஸ்தான் மக்கள்!
Recommended Video
பெங்களூர்: விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கியது குறித்து இதுவரை எந்த விவரங்களும் தெரியாமல் இந்தியா இருக்கும் நிலையில் பாகிஸ்தானும் கூகுளில் தேடி வரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ நிறுவனம் சந்திரயான் 2 விண்கலத்தில் ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் ஆகிய 3 அமைப்புகளை கொண்ட பகுதிகளை அனுப்பியிருந்தது.
இதில் ஆர்பிட்டர் கடந்த 2-ஆம் தேதி சந்திரயான் 2 விலிருந்து பிரிந்து நிலவின் வட்ட பாதையில் சுற்றி வருகிறது.
சவுதியில் எண்ணெய் உற்பத்தி மையம் மீது தாக்குதல்.. கச்சா எண்ணெய் விலை 28 ஆண்டுகளுக்கு பிறகு கிடுகிடு
கருவி
இந்த நிலையில் கடந்த 7-ஆம் தேதி நிலவில் லேண்டர் தரையிறங்கும் நிகழ்வு நடந்தது. நிலவில் லேண்டர் தரையிறங்க 400 மீட்டர் உயரத்தில் இருந்த போது அந்த கருவியுடனான இணைப்பு துண்டிக்கப்பட்டது.
முயற்சி
இந்த நிலையில் லேண்டருடனான தொடர்பை பெற இஸ்ரோ முயற்சித்து வருகிறது. மேலும் லேண்டருடனான தொடர்பை பெறுவதற்கு இஸ்ரோவின் அனுமதியுடன் நாசா முயற்சித்து வருகிறது. லேண்டர் கருவி பக்கவாட்டில் தரையிறங்கியுள்ளது. எனினும் இந்த முயற்சி வெற்றி பெற்று விட்டது.
லேண்டருடனான தொடர்பு
லேண்டருடனான தொடர்பு துண்டிப்பு செயலை அடுத்து அதன் நிலை குறித்து இந்திய மக்கள் ஆர்வமுடன் கூகுளில் தேடி வருகின்றனர். அது போல் பாகிஸ்தானியர்களும் விக்ரம் லேண்டரை அதிகம் தேடி வருகின்றனர். அதாவது இந்தியாவைவிட பாகிஸ்தானியர்களே அதிகம் தேடியுள்ளதாக கூறப்படுகிறது.
ஹேஷ்டேக்
இப்படி பாகிஸ்தானியர், நட்பு நாடான இந்தியாவின் சாதனையை போற்றி வரும் நிலையில் விக்ரம் லேண்டர் தொடர்பை இழந்ததும் #IndiaFails என்ற ஹேஷ்டேக்கை பாகிஸ்தானின் சில விஷமிகள் டிரென்டிங் செய்தனர். இதற்கு #WorthlessPakistan என்ற ஹேஷ்டேக்கை இந்தியர்கள் உலக அளவில் டிரெண்ட் செய்து வந்தனர்.