லத்தியை எடுத்து.. புல்லாங்குழலாக்கி.. ஊஊஊஊ என்று ஊதி அசத்திய போலீஸ்காரர்!
பெங்களூர்: லத்தியை புல்லாங்குழலாக்கி அதிலிருந்து பாடல்களை இசைக்கும் கர்நாடக மாநிலத்தின் போலீஸ் கான்ஸ்டபிளுக்கு பாராட்டுகள் குவிகின்றன.
இசைக்கு எல்லை இல்லை என்று கூறுவார்கள். அதுபோல் எங்கிருந்தும் இசையை எடுக்கலாம் என்றும் கூறுவார்கள். திறமையும் கடவுள் அனுகிரகமும் இருந்தால் இசையை எதிலிருந்தும் உருவாக்கலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக கர்நாடக போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் திகழ்கிறார்.
கர்நாடக மாநிலத்தின் ஹூப்ளி மாவட்டத்தில் தலைமை காவலராக உள்ளவர் சந்திரகாந்த் ஹட்கி. இவர் நாட்டுப்புற பாடல்களை இசைப்பதில் வல்லவர். இவர் ஏற்கெனவே இருக்கும் இசை வாத்தியங்களை காட்டிலும் புதிய புதிய இசை வாத்தியங்களை உருவாக்குவதில் வல்லவர்.
பாவம் விஜயகாந்த்.. வீட்டோடு அடைந்து கிடக்கிறார்.. ஜோடி போட்ட நடிகைகள் எம்பி, எம்எல்ஏ ஆகிட்டாங்க!
வீடியோ
அந்த வகையில் தனது அசாத்திய திறமையால் தனக்கு வழங்கப்பட்ட லத்தியையும் புல்லாங்குழலாக்கியுள்ளார் ஹட்கி. இவர் லத்தியால் வாசித்த நாட்டுப்புற பாடல் இசைக்கும் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
|
திறமைகள்
52 வயதான ஹட்கியின் திறமையை கண்டு பெங்களூர் கூடுதல் போலீஸ் பிரிவு அதிகாரி பாஸ்கர் ராவ் இவரை நேரில் சந்தித்து பரிசளித்துள்ளார். அத்துடன் இவரது திறமைகளை பாராட்டியும் உள்ளார்.
புகழ்
இதுகுறித்து ஹட்கி கூறுகையில் போர் அடிக்கும் போது தனிமையில் இருக்கும் போது புல்லாங்குழலை நான் வாசிப்பேன். இவ்வாறு நான் வாசித்த வீடியோவை பார்த்துவிட்டு கடந்த திங்கள்கிழமை என்னை பார்க்க வேண்டும் என ராவ் அழைப்பு விடுத்தார். பின்னர் எனது திறமையினை பாராட்டி சன்மானம் அளித்தார் என்றார் ஹட்கி. இவரது புகழ் தற்போது கர்நாடக மாநிலம் முழுவதும் பரவி வருகிறது.
|
பாராட்டு
இதனால் அவரை சமூகவலைதளங்களிலும் நேரில் பார்ப்போரும் பாராட்டிய வண்ணம் உள்ளனர். உடன் பணிபுரியும் காவலர்கள், நண்பர்கள், உறவினர்கள் இவருக்கு போன் செய்து பாராட்டியும் இன்னும் சிலர் எஸ்எம்எஸ் அனுப்பியும் வருகின்றனர்.