பக்கு பக்குன்னு முழிக்குது பாருங்க.. இப்படித்தான் இருக்குது பாஜக லட்சணம்.. பிரகாஷ் ராஜ் பொளேர்
ராஜஸ்தான் பெண் வேட்பாளர் ரஞ்சிதா கோலியை பிரகாஷ்ராஜ் விமர்சித்துள்ளார்.
பெங்களூர்: ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக பெண் வேட்பாளர் ஒருவர் செய்தியாளர் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் திக்கித் திணறும் வீடியோ ஒன்றை டிவீட் செய்துள்ள பிரகாஷ் ராஜ், இப்படித்தான் இருக்கிறது பாஜகவின் லட்சணம் என்று கடுமையாக சாடியுள்ளார்.
நடிகர் பிரகாஷ் ராஜ், பெங்களூரு தெற்கு தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார். இந்த நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவைப் போட்டுள்ளார் பிரகாஷ் ராஜ்.
தமிழகத்தில் குண்டுவெடிக்கும் என்ற தகவல் வதந்தி.. பொய் தகவல் பரப்பியவர் பெங்களூரில் கைது
அதில் அவர் கூறியிருப்பதாவது:
அறிவை பாருங்கள்
அன்புள்ள மக்களே. பாஜக சார்பில் போட்டியிடும் இந்த வேட்பாளரைப் பாருங்கள். தொகுதியின் பிரச்சினைகள் குறித்த இவரது அறிவைப் பாருங்கள். அதற்கான தீர்வு குறித்த இவரது ஞானத்தைப் பாருங்கள். இவர் போன்றவர்களால், இவரைப் போன்ற அறிவு உள்ளவர்களால் இந்த நாட்டை எப்படி உயர்த்த முடியும். இவரைப் போன்றவர்கள் சேர்ந்துதான் இந்த நாட்டின் காவலரையும் தேர்ந்தெடுப்பார்கள் என்று கூறியுள்ளார் பிரகாஷ் ராஜ்.
|
ரஞ்சிதா கோலி
சம்பந்தப்பட்ட வீடியோவில் உள்ள வேட்பாளரின் பெயர் ரஞ்சிதா கோலி. இவர் பாஜக சார்பில் ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் லோக்சபா தொகுதியில் போட்டியிடுகிறார். அவரிடம் செய்தியாளர் ஒருவர் பல்வேறு கேள்விகளைக் கேட்கிறார்.
சமாளிக்கிறார்
தொகுதி பிரச்சினைகள், வளர்ச்சித் திட்டங்கள் குறித்துக் கேட்கிறார். அதற்கு பாதி நேரம் ரஞ்சிதா கோலி பதில் தெரியாமல் விழிக்கிறார், திக்கித் திணறி எதையோ பேசி சமாளிக்கப் பார்க்கிறார்.
|
வைரல் ட்வீட்
இதை வைத்துத்தான் பிரகாஷ் ராஜ் தனது டிவிட்டில் சாடியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. முன்னதாக தனது டிவீட்டில் ராஜஸ்தான் என்பதற்குப் பதிலாக உ.பி என்று பிரகாஷ் ராஜ் போட்டு விட்டார். இதை வைத்து அவரை பாஜகவினர் வறுத்தெடுத்து விட்டனர். இதைத் தொடர்ந்து தனது டிவீட்டில் திருத்தம் செய்து புதிய டிவீட் வெளியிட்டார் பிரகாஷ் ராஜ்.