சிறையில் உள்ள சசிகலா இந்த மாதத்தில் விடுதலை ஆவாரா உண்மை என்ன?
பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலா இந்த மாதத்தில் விடுதலை ஆவார் என்று பரவிய செய்திகளில் உண்மை இல்லை என்பது தெரியவந்துள்ளது.
சிறை விடுப்பை பரோலாக பயன்படுத்தாததால் அந்த நாட்களை தண்டனையில் கழித்து இம்மாத இறுதிக்குள் சசிகலா சிறையில் இருந்து விடுதலையாக உள்ளதாக தகவல்கள் பரவியது.
இது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வழக்கறிஞர் நரசிம்ம மூர்த்தி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த சிறை அதிகாரிகள் சசிகலா அடுத்த ஆண்டு ஜனவரி 27ம் தேதிக்கு முன்னர் விடுதலை ஆக வாய்ப்பில்லை என்று கூறியுள்ளது. இதன் மூலம் சசிகலா ஜனவரி 27ம் தேதிதான் விடுதலையாவார் என்பது உறுதியாகி உள்ளது.
அதிமுகவை மீண்டும் சசிகலா தன் வசம் கொண்டுவருவார் அவரது ஆதரவாளர்கள் திடமாக நம்புகின்றனர். சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரலில் நடைபெற உள்ள நிலையில் அதிமுகவில் சசிகலா மீண்டும் இணைந்தால் அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
தடுமாறுகிறதா அதிமுக.. திமுக மீது முதல்வர் ஆவேசம்.. ராஜ்யசபாவில் மத்திய அரசு மீது பாய்ச்சல்.. ஏன்?
ஏனெனில் தற்போதைய நிலையில் ஒபிஎஸ் மற்றும் இபிஎஸ் மட்டுமே அதிமுகவை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து வழி நடத்தி வருகிறார்கள். இப்போது யார் முதல்வர் வேட்பாளர் என்பதில் தான் போட்டியிருப்பதாக தெரிகிறது. எனவே ஜனவரி 27ம் தேதிக்கு பின்னர் தமிழக அரசியலில் பெரும் மாற்றம் வர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.