பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கர்நாடகா எம்.எல்.ஏக்கள் வழக்கு- உச்சநீதிமன்றம் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    சுப்ரீம் கோர்ட்டில் மேலும் 5 அதிருப்தி கர்நாடக எம்எல்ஏக்கள் வழக்கு

    டெல்லி: கர்நாடக சட்டசபையில் இருந்து 15 எம்எல்ஏக்கள் ராஜினாமாவை ஏற்க சபாநாயகர் மறுக்கும் வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படுகிறது.

    கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அமைச்சர் பதவி, முக்கிய இலாகா ஒதுக்கீடு செய்யவில்லை என்ற அதிருப்தி காரணமாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 13 எம்எல்ஏக்களும், மஜதவை சேர்ந்த 3 எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்தனர்.

    SC to hear pleas of 15 Karnataka Rebel MLAs today

    இவர்கள் ராஜினாமா செய்தால் நிச்சயம் கர்நாடகத்தில் ஆட்சி கவிழும் என்பதால் அவர்களது ராஜினாமாவை சபாநாயகர் ரமேஷ்குமார் ஏற்க மறுத்துவிட்டார். இதை எதிர்த்து 15 எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதம் குறித்து சபாநாயகர் எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்பதாலும் அரசியல் சாசன விவகாரம் என்பதாலும் விரிவாக விசாரிக்க வேண்டியுள்ளது. எனவே தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த வழக்கு இன்றைய தினத்துக்கு ஒத்திவைத்தனர்.

    இந்த நிலையில் இன்று இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது காரசார விவாதம் நடைபெற்றது. அதிருப்தி எம்எல்ஏக்கள் தரப்பு சார்பில் வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜராகி வாதம் செய்தார்.

    ஒரு கட்சியை பிடிக்காமல்தான் ராஜினாமா செய்கின்றனர். விரும்பாத ஒரு கட்சியின் கொறடா உத்தரவை எப்படி மதிக்க முடியும்? என வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், கர்நாடகா சட்டசபை சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது. சபாநாயகர் என்ன செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட முடியாது என தெரிவித்தார்.

    இந்த வழக்கில் சபாநாயகர் தரப்பில் அபிஷேக் சிங்வி வாதம் செய்தார். அது போல் எம்எல்ஏக்கள் தரப்பில் முகுல் ரோத்தகி வாதம் செய்தார். இரு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் இந்த வழக்கில் நாளை காலை 11.30 மணிக்கு தீர்ப்பு வழங்குவதாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அறிவித்தார்.

    English summary
    Arguments concluded in Rebel MLAs case, SC to deliver verdict tomorrow at 10.30 am.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X