பெங்களூர் முழுக்க 2 நாட்களுக்கு 144 தடையுத்தரவு.. மதுபான விற்பனைக்கும் தடை!
Recommended Video
பெங்களூர்: குமாரசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை சந்தித்த நிலையிலேயே, பெங்களூர் நகரம் முழுக்க இன்று மாலை 6மணி முதல் நாளை மறுநாள் வியாழக்கிழமை மாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுவதாக பெங்களூர் நகர போலீஸ் கமிஷனர் அலோக் குமார் அறிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், பெங்களூர் நகரம் முழுக்க வரும் 25ம் தேதி வரை மாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
5 பேருக்கும் மேலாக கும்பலாக நின்று பேசுவதோ, கூட்டமாக செல்வதும் தடை செய்யப்படுகிறது. மேலும் இந்த தினங்களில் நகரில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
போதிய எம்எல்ஏக்கள் பலமில்லாமல் நம்பிக்கை வாக்கெடுப்பை குமாரசாமி அரசு சந்திக்கும் நிலையில், இதுபோன்ற ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஒருவேளை அரசு கலைந்தால் அரசியல் கட்சியினர் நடுவே மோதல் போக்கு ஏற்படும் வாய்ப்பு இருப்பதால், இது போன்ற ஒரு உத்தரவை பிறப்பித்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. அதேபோல நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு கவிழ்ந்தது குறிப்பிடத்தக்கது.