பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொட்டி கிடந்த ஆணுறைகள்.. லாட்ஜ்களில் "சுரங்க அறை" அமைத்து விபச்சாரம்.. மலைத்து போன போலீசார்

லாட்ஜ்களில் விபச்சாரம் செய்த 4 பேர் கைதாகி உள்ளனர்

Google Oneindia Tamil News

பெங்களூரு: லாட்ஜில் சுரங்க அறை அமைத்து பாலியல் தொழில் நடைபெற்று வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் தும்கூரு - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நிறைய தனியார் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன..

இங்கு விடுதிகளில் அதிகளவில் பாலியல் தொழில் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

யார் அந்த 2 தமிழ் நடிகைகள்.. பங்களாவுக்குள் விபச்சாரம்.. போலீசாரிடம் கண்ணீர் விட்டு கதறல்.. பரபரப்புயார் அந்த 2 தமிழ் நடிகைகள்.. பங்களாவுக்குள் விபச்சாரம்.. போலீசாரிடம் கண்ணீர் விட்டு கதறல்.. பரபரப்பு

அதிரடி

அதிரடி

அந்த தகவல்களின் அடிப்படையில் கேத்தசந்திரா போலீஸார் அந்த பகுதியில் உள்ள விடுதிகளில் அதிரடி சோதனையை மேற்கொண்டனர்.. அப்போது நந்தி லாட்ஜ் என்ற தனியார் விடுதியையும் சோதனை செய்தனர்.. அந்த லாட்ஜில் நிறைய ரூம்கள் வித்தியாசமாக காணப்பட்டன.. அவைகள் புதிதாக அமைக்கப்பட்டு இருந்தது போல சந்தேகம் ஏற்பட்டது.

டேபிள்

டேபிள்

முதலில் போலீசார் சோதனையிட்டபோது, அந்த அறையை சாதாரணமாக பார்த்து சோதனை செய்தனர்.. அந்த ரூமில் யாருமே இல்லை.. ஆனாலும் போலீசாருக்கு ஏதோ சந்தேகமாகவே பட்டது.. அதனால், அந்த ரூம் அறையின் சுட்டில் ஒரு டேபிள் இருந்தது.. அந்த டேபிளை அகற்றி சுவற்றை தட்டிப்பார்த்தனர்.. பிறகுதான் அது ஒரு கதவு என்பதும், சுவற்றின் பெயின்ட் கலரிலேயே அந்த கதவு இருக்கவும் சரியாக தென்படவில்லை..

அதிர்ச்சி

அதிர்ச்சி

அந்த கதவானது, ஒரு நபர் மட்டுமே உள்ளே நுழைந்து செல்லக்கூடிய அளவில் இருந்தது. அதனால் அதிர்ச்சியுற்ற போலீசார், அந்த கதவையும் திறந்து பார்த்தனர்.. அப்போது ஒரு சுரங்க அறையை ஏற்படுத்தியிருந்ததை கண்டுபிடித்தனர்.. அந்த சுரங்க ரூமில், 2 பெண்கள் மற்றும் 3 இளைஞர்களும் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்தனர்..

 ஆணுறைகள்

ஆணுறைகள்

அவர்களை அதிரடியாக போலீசார் கைது செய்தனர்... இப்படித்தான் சில தினங்களுக்கு முன்பு இதே தும்கூரு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆணுறைகள் கொட்டப்பட்டு இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது... அந்த ஆணுறைகள் எப்படி வந்தன? யார் கொட்டியது? அவ்வளவு எண்ணிக்கையில் ஒரே இடத்தில் கொட்டப்பட்டிருந்ததற்கான காரணங்களையும் ஆராய்ந்து வந்தனர்..

 சுரங்க அறை

சுரங்க அறை

ஆனால், இப்போதுதான், இங்குள்ள லாட்ஜ்களில் பாலியல் தொழில் செய்யும் கும்பல் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்... லாட்ஜ்களில் சுரங்க அறை அமைத்து விபச்சாரம் நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

English summary
In Karnataka, condoms were dumped about a kilometer away on the Tumkur National Highway, causing a great stir. The discovery of a sex worker gang in a lodge here has raised suspicions among the police. 4 people who were there have been arrested. They have been setting up mines and doing sex work.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X