பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வாயைவிட்டு சிக்கலில் மாட்டிய நித்தியானந்தா.. போலீசில் பரபரப்பு புகார்

Google Oneindia Tamil News

Recommended Video

    Complaint against Nithyananda | ஜலகண்டேஸ்வரர் லிங்கத்தை கடத்தியதாக நித்தியானந்தா மீது புகார்

    பெங்களூர்: சாமியார் நித்தியானந்தா வெளியிட்ட ஒரு வீடியோ அவருக்கே பிரச்சினையாக மாறிப்போயுள்ளது.

    சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர் தேக்கப்பகுதியில் உள்ள சிவன் கோவிலின் மூல லிங்கம் தற்போது தன்னிடம் இருப்பதாகவும், அந்த கோவிலை கடந்த பிறவியில் தான் கட்டியதாகவும், கர்நாடகாவில் ஆசிரமம் வைத்துள்ள, சாமியார் நித்யானந்தா ஒரு வீடியோ வெளியிட்டார்.

    Shiva Lingam: Police complaint filed against Nithyananda

    அவர் ஏதோ நினைத்து சொன்னார். ஆனால் நடந்ததோ வேறு. கொளத்தூரை அடுத்த பாலவாடி என்ற கிராமத்தை சேர்ந்த சக்திவேல் (26) என்பவர் இந்த வீடியோவை பார்த்து கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார்.

    இதையடுத்து, விரைந்து சென்று, கடந்த மாதம் 28ம் தேதி கொளத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்று கொடுத்தார். அந்த புகாரில், மேட்டூர் அணையின் நீர் தேக்கப்பகுதியான பண்ணவாடியில் இருந்த சிவன் கோவில் தற்போது புனரமைக்கப்பட்டு பாலவாடி கிராமத்தில் ஜலகண்டேஸ்வரர் கோவிலாக உள்ளது என்றும், ஆனால், இந்த கோவிலுக்கு சொந்தமான மூல லிங்கம் தன்னிடம் இருப்பதாக, நித்யானந்தா வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார்.

    எனவே, அந்த மூல லிங்கத்தை நித்தியானந்தாவிடமிருந்து மீட்டு தர வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் அவரது புகாரின் பேரில் நேற்று சாமியார் நித்யானந்தா மீது கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    English summary
    Police complaint filed against Nithyananda over Shiva Lingam issue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X