கர்நாடகா முன்னாள் முதல்வர்கள் குமாரசாமி, சித்தராமையா மீது தேசதுரோக வழக்கு
பெங்களூர்: கர்நாடகா முன்னாள் முதல்வர்கள் குமாரசாமி, சித்தராமையா மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் மீது பெங்களூரு நகர போலீசார் தேசதுரோக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
லோக்சபா தேர்தலின் போது ஜேடிஎஸ், காங்கிரஸ் கட்சி தலைவர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனை நடைபெறுவதற்கு முன்னதாக இது தொடர்பாக ஊடகங்களுக்கு குமாரசாமி, சித்தராமையா, சில ஐபிஎஸ் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்; அத்துடன் போராட்டத்தையும் நடத்தினர் என சமூக ஆர்வலர் மல்லிகார்ஜூன் புகார் தெரிவித்திருந்தார்.
கடந்த மார்ச் 27,28 ஆகிய தேதிகளில் இந்த வருமானவரி சோதனை நடைபெற்றது. மல்லிகார்ஜூனாவின் புகாரை போலீசார் ஏற்றுள்ளனர்.
அத்துடன் குமாரசாமி, சித்தராமையா உள்ளிட்டோர் மீது தேசத்துரோகம், அவதூறு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் பெங்களூரு நகர போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.