நாங்கெல்லாம் மோடி பிறப்பதற்கு முன்பே சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தியவர்கள்.. சித்தராமையா
பெங்களூர்: மோடி பிறப்பதற்கு முன்னரே சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தியவர்கள் காங்கிரசார் என கர்னாடக மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
பி,டி.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த கர்னாடக முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சித்தராமையா தேர்தல் பிரச்சாரங்களில் மோடி பெண்களை குறித்தோ, விவசாயிகள் குறித்தோ, அல்லது வேலையின்மை குறித்தோ பேசுவதில்லை மாறாக சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் குறித்து மட்டுமே பேசுகிறார். கடந்த காலங்களில் 12 சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடந்துள்ளது. 1948-49- ல் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கின் போது மோடி பிறந்திருக்க கூட மாட்டார். அப்போதே காங்கிரஸ் கட்சி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கை நடத்தியது.
1977 -ம் ஆண்டு இந்திரா பிரதமராக இருந்தபோது வங்க தேசம் தனியாக பிரிக்கப் பட்டது. அப்போதெல்லாம் மோடி எங்கு சென்றிருந்தார்? அப்போது மோடி ராணுவத்தில் சிப்பாயாக இருந்தாரா என்று கேள்வி எழுப்பிய சித்தராமையா நாடு சுதந்திரம் அடைந்த பிறகு அவ்வப்போது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடந்து கொண்டேதான் இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர் இந்த தேர்தலில் மோடி அலை என்று ஒன்றும் இல்லை. மக்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணியை ஆட்சிக்கு கொண்டு வரும் மனநிலையில் உள்ளனர். மதவாத பிரிவினை சக்திகளை மக்கள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். இந்த முடிவு தேசிய ஜனநாயக கூட்டணியை ஆட்சிக்கு கொண்டு வர மக்கள் விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது என்று தெரிவித்தார்.
சு.சுவாமியின் செம மூவ்.. தினகரன் கட்சிக்கு லோக்சபா தேர்தலில் பெரும் சவால்!
மொத்தமுள்ள 543 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் பாஜகவும் தனித்தனியே 150 இடங்களை தாண்டும் ஆனால் இரு கட்சிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்காது. அதே வேளையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி பெரும்பான்மை பலத்தை பெறும். கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 20 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றும்.
மோடி தற்போது ஆர் எஸ் எஸ் எஸ் சின் சின்னமாக உள்ளார். மோடியை தாக்கிப் பேசினால் அது ஆர் எஸ் எஸ் எஸ் ஐ தாக்கிப் பேசுவது போலாகும் என்றும் சித்தராமையா கூறினார்