வெட்கமாக இருக்கிறது எடியூரப்பா.. 144 தடை குறித்து விமர்சித்த சித்தராமையா!
Recommended Video
பெங்களூர்: பெங்களூரில் 144 தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதற்கு வெட்கமாக இருக்கிறது என எடியூரப்பாவை முன்னாள் முதல்வர் சித்தராமையா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
வடகிழக்கு மாநிலங்கள், வட மாநிலங்கள், தென்னிந்தியா என நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடைபெற்று வருகிறது. வடமாநிலங்களில் போராட்டக்காரர்கள் பேருந்துகளா எரிப்பது, கல்வீசுவது உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெங்களூரில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.இந்த நிலையில் பெங்களூர் நகரம் முழுவதும் இன்று காலை 6 மணி முதல் 144 தடையுத்தரவு அமலுக்கு வருவதாக மாநகர போலீஸார் அறிவித்தனர். போராட்டங்களை ஒடுக்குவதற்காக மாநில பாஜக அரசு போலீஸா ஏவி விடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
After series of assault on the values enshrined in the Constitution, it is time to take away the Right to Peaceful Protest through Sec144
— Siddaramaiah (@siddaramaiah) December 18, 2019
I never expected @bsybjp to play to the tune of @narendramodi. I thought he was more progressive & inclusive.
Shame on You Mr. Yediyurappa.
இந்த 144 தடையுத்தரவை மீறி டவுன்ஹால் பகுதியில் எழுத்தாளர் ராமசந்திர குஹா தர்ணா போராட்டம் நடத்தினார். அவரை போலீஸார் இழுத்து சென்று அப்புறப்படுத்தினர்.
இந்த நிலையில் 144 தடையுத்தரவு குறித்து முன்னாள் முதல்வர் சித்தராமையா, கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் அரசியலமைப்பின் மீதான தொடர் தாக்குதலுக்கு பிறகு, 144 தடையுத்தரவு மூலம் அமைதியாக போராடும் உரிமையை கூட பறித்துவிட்டீர்கள்.
எடியூரப்பா! நரேந்திர மோடியை போல் செயல்படுவீர்கள் என நான் எதிர்பார்க்கவேயில்லை. அவர் முற்போக்கானவர் என நினைத்தேன். இப்போது வெட்கமாக இருக்கிறது எடியூரப்பா என தனது ட்விட்டர் பக்கத்தில் சித்தராமையா தெரிவித்துள்ளார்.