கடனை விட சொத்துகள் அதிகம்.. உரியவர்களுக்கு திருப்பி கொடுங்கள்.. கடிதத்தில் சித்தார்த்தா உருக்கம்
Recommended Video
பெங்களூர்: கடன் கொடுத்தவர்களுக்கு சொத்துகளை திருப்பி கொடுத்துவிடுங்கள் என தனது இறுதி கடிதத்தில் சித்தார்த்தா குறிப்பிட்டுள்ளார்.
காபி டே நிறுவனர் சித்தார்த்தா, நேற்று இரவு மங்களூர் அருகே உள்ள நேத்ராவதி ஆற்றுப் பாலத்தில் நடக்க சென்றவர் திரும்பி வரவேயில்லை. கார் டிரைவர் அவரை பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து தக்ஷின கன்னட போலீஸார், சித்தார்த்தாவை தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் சித்தார்த்தா காணாமல் போனதற்கு இரு நாட்களுக்கு முன்னர் தனது நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
சித்தார்த்தாவின் ரிலாக்ஸ் வாக்கிங் கடைசியில் இறுதி நடையாக மாறிய சோகம்.. பரபரப்பு பின்னணி!
வர்த்தகம்
அந்த கடிதத்தில் கடும் முயற்சிகளை மேற்கொண்டும் எனது தொழிலை லாபகரமானதாக்க முடியவில்லை. என் மீது நம்பிக்கை வைத்திருந்தவர்களுக்கு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். 6 மாதத்திற்கு முன்பு நான் ஒரு வர்த்தகத்தை மேற்கொண்டிருந்தேன். இதற்காக எனது நண்பர் ஒருவரிடமிருந்து பெரும் பணத்தை கடனாக பெற்றேன்.
போராட்டம்
ஆனால் நான் விற்ற பங்குகளைத் திரும்ப வாங்கிக் கொள்ளுமாறு எனது பங்குகளை வாங்கிய ஒருவர் என்னை மிகவும் நெருக்குகிறார். நீண்ட காலம் நான் போராடி விட்டேன்.. இனிமேலும் என்னால் போராட முடியவில்லை. எனவே எனது போராட்டத்தை நிறுத்திக் கொள்ள தீர்மானித்து விட்டேன்.
சொத்துகள் பட்டியல்
எனக்கு யாரையும் ஏமாற்றும் எண்ணம் இல்லை. ஒரு தொழில்முனைவோராக நான் தோற்றுவிட்டேன். இதை நீங்கள் என்றாவது ஒரு நாள் புரிந்து கொள்வீர்கள். என்னை மன்னித்துவிடுங்கள். இந்த கடிதத்துடன் எனக்கு சொந்தமான சொத்துகளின் பட்டியலை இத்துடன் இணைத்துள்ளேன்.
திருப்பி செலுத்துங்கள்
மேலும் அந்த சொத்துகளின் தோராய மதிப்பையும் குறிப்பிட்டுள்ளேன். கடன் தொகையை விட அதிக எண்ணிக்கையில் சொத்துகள் உள்ளன. எனவே யாருக்கெல்லாம் கடன் கொடுக்க வேண்டுமோ அவர்களுக்கு திருப்பி செலுத்திவிடுங்கள் என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.