பிரதமர் பதவியை தக்க வைக்க கர்நாடகா கோவில்களில் ரணில் விக்கிரமசிங்கே சிறப்பு யாகம்!
பெங்களூரு: பிரதமர் பதவியை தக்க வைக்க ஜோதிடர்களின் ஆலோசனைப்படி கர்நாடகா கோவில்களில் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே சிறப்பு வழிபாடுகளை நடத்தினார்.
இலங்கையில் விரைவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அதேநேரத்தில் பிரதமர் பதவிக்கு மீண்டும் மீண்டும் மகிந்த ராஜபக்சே குறிவைத்து வருகிறார்.
இதனால் ரணில் விக்கிரமசிங்கேவின் பதவிக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் திடீரென கர்நாடகா கோவில்களில் ரணில் விக்கிரமசிங்கே சிறப்பு யாகம் மற்றும் வழிபாடுகளை நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவுக்கு வெள்ளிக்கிழமை காலை மனைவி மைத்ரி விக்கிரமசிங்கேவுடன் ரணில் வருகை தந்தார். பின்னர் தரைமார்க்கமாக உடுப்பி கொல்லூர் மூகாம்பிக்கை ஆலயத்தில் வழிபாடு நடத்தினார். அங்கு சிறப்பு யாகமும் நடத்தப்பட்டது.
ரணிலின் வருகையை முன்னிட்டு அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் கடைகளும் முழுமையாகவே அடைக்கப்பட்டிருந்தன.
பின்னர் கேரளாவின் காசர்கோடு பகுதியில் பெலா, குமாரமங்கலத்திலும் ரணில் தம்பதியினர் பிரார்த்தனைகள் செய்தனர். பிரதமர் பதவியை தக்க வைக்க ஜோதிடர்கள் ஆலோசனைப்படி இந்த ஆன்மீக பயணத்தை ரணில் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.