நடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை ஸ்ருதி.. போலீஸில் வசமாக சிக்கிய சோகம்!
Recommended Video
பெங்களூர்: நடிகர் அர்ஜூன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை ஸ்ருதி ஹரிஹரன் ஏற்கெனவே தனக்கு திருமணமானதை மறைத்துள்ளது தெரியவந்தது.
மீ டூ இயக்கத்தில் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் குறித்து புகாராக அளித்து வருகின்றனர். இதனால் மீ டூ ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது. இதில் பிரபலங்கள் மீதும் புகார் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் நிபுணன் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஸ்ருதி ஹரிஹரன். இதில் ஆக்ஷன் கிங் அர்ஜூனும் நடித்திருந்தார். இவர் மீது ஸ்ருதி பாலியல் புகார் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஒரு போட்டோவால் வந்த வினை.. கலிபோர்னியாவின் 800 அடி மலையில் இருந்து விழுந்து பலியான இந்திய தம்பதி!
பாலியல் புகார்
நிபுணன் படத்தில் நடித்த போது அர்ஜூன் தனது முதுகை தடவினார். இறுக்கமாக கட்டி அணைத்தார். அவர் தங்கியிருந்த அறைக்கு தன்னை அழைத்தார். இரட்டை அர்த்தங்களில் தன்னிடம் பேசினார் என்று ஸ்ருதி பாலியல் புகார் கூறினார்.
அர்ஜுன் வலியுறுத்தல்
இதை அர்ஜுனும் அவரது குடும்பத்தினரும் மறுத்தனர். இவ்வளவு ஏன் அந்த படத்தின் இயக்குநராக இருந்த அருண் வைத்தியநாதனே மறுத்தார். தனக்கு வயதுக்கு வந்த இரு மகள்கள் இருப்பதால் நெருக்கமான காட்சிகள் வைப்பதை குறைத்து கொள்ளுங்கள் என்று தன்னிடம் அர்ஜுன் வலியுறுத்தியதாக கூறினார்.
ஸ்ருதி பித்தலாட்டம்
இந்நிலையில் அர்ஜுன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஸ்ருதி ஒரு பித்தலாட்டம் செய்து போலீஸில் சிக்கியுள்ளார்.
வாய்ப்புகள்
அதாவது சினிமா துறையில் நடிகர்களை போல் நடிகைகளுக்கு ஊதியம் கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இதிலும் திருமணம் நடந்துவிட்டதால் அவர்களுக்கான திரைப்பட வாய்ப்புகளும் குறைந்து ஊதியமும் கணிசமாக கிடைக்காது.
அதிர்ச்சி
இந்த காரணத்துக்காக நடிகை ஸ்ருதி ஹரிஹரன் தனக்கு ராம்குமார் என்பவருடன் திருமணம் ஆனதை மறைத்துள்ளார். அர்ஜுன் விவகாரத்தில் போலீஸிடம் கூறிய புகாரில் ஸ்ருதி, திருமணமானதை கூறியதை அடுத்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.