சத்தமின்றி பரவும் கொரோனா வைரஸ்.. பெங்களூர்வாசிகளின் நிலை என்ன? ஒரு குட் நியூஸ் இருக்கு!
பெங்களூரில் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபருக்கு, கொரோனா வைரஸ் தாக்கவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
பெங்களூர்: பெங்களூரில் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபருக்கு, கொரோனா வைரஸ் தாக்கவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சீனாவில் வுஹன் நகரத்தில் தோன்றிய கொரோனா வைரஸ் ஒரு மனிதரில் இருந்து இன்னொரு மனிதருக்கு பரவு கூடியது. கொரோனா வைரஸ் காரணமாக மொத்தமாக சீனாவில் வுஹன் நகரம் மூடப்பட்டுள்ளது. இந்த கோரோனா வைரஸ் காரணமாக சீனாவில் 80 பேர் பலியாகி உள்ளனர்.
கேரளாவில் 7 பேருக்கு இதற்கான அறிகுறிகள் இருப்பதாக செய்திகள் வந்துள்ளது. இந்த 7 பேரை தற்போது தனி அறையில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். அதேபோல் மும்பை, ஹைதராபாத்தில் பாதிக்கப்பட்ட 2 பேரையும் தனியாக வைத்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த நிலையில்தான் பெங்களூருக்கு இந்த கொரோனா வைரஸ் பரவி இருக்கலாம் என்று அச்சம் நிலவி வருகிறது. அதன்படி பெங்களூரின் எலஹங்கா பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த ஜனவரி தொடக்கத்தில் சீனா சென்றார். வுஹன் நகரத்திற்கு வியாபார விஷயமாக சென்று திரும்பி உள்ளார்.
ஜனவரி 19 திரும்பிய அவருக்கு ஜனவரி 21ம் தேதி காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் அவர் உடனே பெங்களூர் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரின் ரத்தம் பரிசோதிக்கப்பட்டது. கடந்த ஒரு வாரமாக அவருக்கு தனி அறையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
கொரோனா வைரஸ்: வனவிலங்குகள், கடல் உயிரின வர்த்தகத்திற்கு தற்காலிக தடை விதித்தது சீனா
இதையடுத்து அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனை முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி அந்த இளைஞருக்கு கொரோனா வைரஸ் தாக்கவில்லை. ஆனால் மோசமான வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதனால் இவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.
இவரின் உயிருக்கு எதுவும் ஆபத்து இல்லை. ஆனால் பாதுகாப்பு கருதி இவருக்கு மேலும் சில நாட்கள் சிகிச்சை அளித்து கண்காணிப்பில் வைக்க வேண்டும் என்று ராஜீவ் காந்தி மருத்துவமனை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல் பெங்களூரில் யாருக்கும் இதுவரை கொரோனா பரவவில்லை என்று கூறியுள்ளனர்.