மத்திய அமைச்சர் சதானந்த கவுடா திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
பெங்களூர்: மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவுக்கு சர்க்கரையின் அளவு குறைந்ததால் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய உரம் மற்றும் ரசாயனத் துறை அமைச்சராக உள்ளவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சதானந்த கவுடா. அவர் நேற்று சித்ரதுர்காவில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
நேற்று மதியம் 2 மணி அளவில் உணவுக்குச் செல்லும் முன்பு அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள், உடனே அவரை சித்ரதுர்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவருக்கு சர்க்கரை அளவு குறைந்திருப்பதாக தெரிவித்தனர். இதற்கான சிகிச்சையை தொடங்கினர். பின்னர் அடுத்த ஒரு மணி நேரத்தில் அவருக்கு மயக்கம் தெளிந்து சுயநினைவு வந்தது.
அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து மேல் சிகிச்சைக்காக பெங்களூருக்கு அழைத்து வரப்பட்டார். அவர் அழைத்து வரப்பட்ட ஆம்புலன்ஸுக்கு பூஜ்ஜிய போக்குவரத்து வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது.
பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் நல்ல நிலையில் இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். முதல்வர் எடியூரப்பா, மாநில பாஜக தலைவர் நளின்குமார் கட்டீல் உள்பட அக்கட்சி தலைவர்கள் செல்போன் மூலம் சதானந்த கவுடாவின் உடல்நிலையை கேட்டறிந்தனர்.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து ஓரிரு நாளில் விடுதலை ஆகிறார் சுதாகரன்
சதானந்தா கவுடாவின் நிலை மோசமாக இல்லை என்று அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களும் தெரிவித்தனர். அவரது உடல்நிலை தற்போது நன்றாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார். அவரது இதய செயல்பாடுகள் குறித்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
மேல் சிகிச்சைக்காக சதானந்த கவுடா பெங்களூருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். மத்திய அமைச்சர் சதானந்த கவுடா திடீரென மயங்கி விழுந்தார். அவரது உடல்நிலை இயல்பு நிலைக்கு திரும்பியதை அடுத்து பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் இடையே இருந்த ஆதங்கம் நீங்கியது.