பிசி ரோடு டோல்கேட்டை கடைசியாக கடந்த சித்தார்த்தாவின் கார்.. பரபரப்பு வீடியோ காட்சிகள்
Recommended Video
Coffee Day Owner VG Siddhartha : காபி டே ஓனர் சித்தார்த்தா எழுதிய கடைசி கடிதம் சிக்கியது- வீடியோ
பெங்களூர்: காபி டே நிறுவனர் சித்தார்த்தாவின் கார் கடைசியாக தக்ஷின கன்னட மாவட்டத்தில் உள்ள ஒரு டோல்கேட்டில் கடக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.
காபி டே நிறுவனர் சித்தார்த்தா மங்களூர் சென்று கொண்டிருந்த நிலையில் நேற்று மாலை முதல் நேத்ராவதி ஆற்றுப்பாலத்திலிருந்து காணவில்லை. அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
எனினும் அவர் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. அவரை கடலோர காவல் படையினர், ஹெலிகாப்டர் கொண்டு தேடி வருகின்றனர். அவர் காணாமல் போனாரா, தற்கொலை செய்து கொண்டாரா, யாராவது கடத்திவிட்டார்களா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சித்தார்த்தா நேற்று அவரது கார் தக்ஷின கன்னட மாவட்டத்தில் உள்ள பன்ட்வால் கிராஸ் ரோடு சாலை (பிசி ரோடு) எனப்படும் சாலையில் உள்ள டோல்கேட்டை கடந்து செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
Comments
English summary
Coffee Day Owner Siddhartha's car was last seen in the toll gate.
Story first published: Tuesday, July 30, 2019, 17:01 [IST]