பெங்களூரு லாக்டவுன் - மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் காலை 5 மணி முதல் பகல் 12 மணிவரை மட்டுமே திறப்பு
பெங்களூரு: கொரோனாவை கட்டுப்படுத்த பெங்களூருவில் ஜூலை 14 முதல் ஜூலை 22 வரை லாக்டவுன் அமல்படுத்தப்பட உள்ளது. இந்த லாக்டவுன் காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் கால 5 மணி முதல் பகல் 12 மணிவரை மட்டுமே திறந்திருக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு நகரத்தில் கொரோனா கட்டுக்குள் வரவில்லை. இதனையடுத்து மீண்டும் ஒருவார கால லாக்டவுன் அமல்படுத்தப்பட உள்ளது.
பெங்களூருவில் நாளை இரவு 8 மணி முதல் 22-ந் தேதி அதிகாலை 5 மணிவரை இந்த லாக்டவுன் அமலில் இருக்கும். இந்த லாக்டவுன் காலத்தில் எவை எவை திறந்திருக்கும்? எவையெல்லாம் கட்டாயம் மூடப்பட வேண்டும் என்பது குறித்த வழிகாட்டுதல்களை கர்நாடகா அரசு வெளியிட்டுள்ளது.
ராமர் பிறந்த உண்மையான அயோத்தி நேபாளத்தில் இருக்கிறது- ராமர் இந்தியர் அல்ல- நேபாளி: நேபாள பிரதமர் ஒளி
லாக்டவுன் காலத்தில் கட்டுப்பாடுகளை மீறினால் என்ன தண்டனை விதிக்கப்படும் என்பதையும் இந்த வழிகாட்டுதலில் கர்நாடகா அரசு தெரிவித்துள்ளது. கர்நாடகா அரசின் லாக்டவுன் கட்டுப்பாடுகள்/ தளர்வுகள் அறிவிக்கை விவரம்: