பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காலையில் இருந்து சொகுசு ஹோட்டலில் தங்கி இருந்தது ஏன்? குமாரசாமி மீதான புகார்.. பகீர் விளக்கம்!

கர்நாடக சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் நிலையில் குமாரசாமி தனியார் ஹோட்டலில் காலையில் இருந்து தங்கி இருந்தது ஏன் என்று விளக்கம் அளித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி... கவிழ்ந்தது கர்நாடக அரசு

    பெங்களூர்: கர்நாடக சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் நிலையில் குமாரசாமி தனியார் ஹோட்டலில் காலையில் இருந்து தங்கி இருந்தது ஏன் என்று விளக்கம் அளித்துள்ளார்.

    கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் சார்பாக அமைக்கப்பட்டு இருக்கும் கூட்டணி ஆட்சி கவிழும் நிலைக்கு சென்றுள்ளது. காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி முதல்வர் குமாரசாமி இன்னும் சில நிமிடங்களில் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்க இருக்கிறார்.

    அங்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 13 பேர் மற்றும் மஜத எம்எல்ஏக்கள் 3 பேர் பதவி விலகியதை அடுத்து அம்மாநில அரசு கவிழும் நிலைக்கு சென்றது. இதுதான் அங்கு ஆட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தியது. இதனால் முதல்வர் குமாரசாமி தாமாக முன்வந்து நம்பிக்கை வாக்கெடுப்பை கோரினார்.

    இதோ ராஜினாமா கடிதம்.. பாக்கெட்டிலிருந்து எடியூரப்பாவிடம் எடுத்து காட்டிய சபாநாயகர் இதோ ராஜினாமா கடிதம்.. பாக்கெட்டிலிருந்து எடியூரப்பாவிடம் எடுத்து காட்டிய சபாநாயகர்

    ஆனால்

    ஆனால்

    ஆனால் ஒரு வாரமாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமல் அவர் காலம் தாழ்த்தி வந்தார். இன்றும் அவர் அவைக்கு வராமல் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த விடமால் காலம் தாழ்த்தி வந்தார். இன்று மாலையே நம்பிக்கை நடத்த வேண்டும், சபாநாயகர் ரமேஷ் குமார் கூறிய பின்பும் கூட முதல்வர் குமாரசாமி அவைக்கு மதியம் வரை வரவில்லை.

    வரவில்லை

    வரவில்லை

    முதல்வர் குமாரசாமி அவைக்கு வராமல் பெங்களூரில் இருக்கும் தாஜ் வெஸ்ட் எண்ட் ஹோட்டல் என்ற தனியார் சொகுசு ஹோட்டலில் தங்கி இருந்தார். அவரின் இந்த செயல் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதை பாஜகவும் கிண்டல் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    எங்கு

    ஆட்சி கவிழும் நிலையில் முதல்வர் குமாரசாமி தாஜ் வெஸ்ட் எண்ட் ஹோட்டலில் தங்கி இருக்கிறார். ஆட்சியின் கடைசி நொடி வரை கூட அவர் மக்கள் வரி பணத்தை திருட நினைக்கிறார். கர்நாடக மக்களுக்கு அவர்கள் பதில் சொல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று பாஜக சார்பாக டிவிட் செய்யப்பட்டு இருந்தது.

    என்ன புகார்

    என்ன புகார்

    இந்த நிலையில் இந்த புகாருக்கு தற்போது குமாரசாமி விளக்கம் அளித்துள்ளார். அதில், தாஜ் வெஸ்ட் எண்ட் ஹோட்டலில் நான் தங்கி இருந்தது உண்மைதான். சென்ற வருடம் அங்கு இருந்த போதுதான் சட்டசபை தேர்தல் முடிந்தது. தொங்கு சட்டசபை உருவான போது நான் அங்குதான் தங்கி இருந்தேன். அப்போதுதான் காங்கிரஸ் சார்பாக குலாம் நபி ஆசாத் போன் செய்து என்னை ஆட்சி அமைக்க அழைத்தார்.

    இதுதான்

    இதுதான்

    எனக்கு அப்போதுதான் காங்கிரஸ் ஆதரவு அளித்தது. இதனால் அந்த ஹோட்டல் எனக்கு ராசியான ஹோட்டலாக இருந்தது. இதனால்தான் அதே ஹோட்டலில் அதே அறையில் நான் இன்று தங்கி இருந்தேன். இதில் என்ன தவறு இருக்கிறது, என்று குமாரசாமி தெரிவித்துள்ளார்.

    English summary
    Why I stayed in a star hotel on the day of Karnataka Floor Test? Kumaraswamy gives a bizarre reason.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X