டிச. 31ம் தேதியோடு விலகுகிறார் இன்போசிஸ் இயக்குநர் பாலகிருஷ்ணன்
மும்பை: இன்ஃபோசிஸ் இயக்குனர் மற்றும் தலைமை நிதி அதிகாரி வி.பாலகிருஷ்ணன் அந்நிறுவனத்தில் இருந்து இம்மாதத்துடன் விலகுகிறார்.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் இருந்து வி. பாலகிருஷ்ணன் விலகும் தகவல் மும்பை பங்கு சந்தையில் தெரிவிக்கப்பட்டது. கடந்த ஜூன் மாதம் நாராயண மூர்த்தி தலைமை வகித்ததும் அந் நிறுவனத்தில் இருந்து எட்டாவது உயர் அதிகாரியாக பாலகிருஷ்ணன் வெளியேற உள்ளார்.
மேலும் இன்ஃபோசிஸ் பிபிஓ தலைவர், இன்ஃபோசிஸ் லோட்ஸ்டோன் தலைவர் பொறுப்புகளையும் வகித்தவர் பாலகிருஷ்ணன். பாலா வெளியேறுவது இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு ஒரு பெரிய இழப்பு. அவரின் பங்கு மிக சிறந்ததாக இருந்தது மற்றும் அவர் வெளியேறுவது மிகவும் வருத்தமாக உள்ளது என்று முன்னாள் இன்போசிஸ் இயக்குனரான மோகன்தாஸ் பய் கூறியுள்ளார்.
22 ஆண்டுகளாக இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் பணியாற்றிய மூத்த அதிகாரி பாலகிருஷ்ணன். 1991 ஆம் ஆண்டில் நிறுவனத்தில் சேர்ந்தவர் வி.பாலகிருஷ்ணன். பல ஆண்டுகளாக தலைமை நிதி அதிகாரியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.