பட்ஜெட் எதிரொலி: பிரீமியம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5 குறைப்பு
டெல்லி: மத்திய பட்ஜெட்டில் பிரீமியம் பெட்ரோல் மீதான கலால் வரி குறைக்கப்பட்டதை அடுத்து அதன் விலை லிட்டருக்கு ரூ.5 குறைந்துள்ளது.
நிதி அமைச்சர் அருண் ஜேட்லி 2014-2015ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போது அவர் பிரீமியம் பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.7.50ல் இருந்து ரூ.2.35 ஆக குறைப்பதாக அறிவித்தார்.
பிரீமியம் பெட்ரோலுக்கு லிட்டருக்கு ரூ.15.50ம், சாதாரண பெட்ரோலுக்கு ரூ.9.20ம், பிரீமியம் டீசலுக்கு ரூ.5.75ம், சாதராண டீசலுக்கு ரூ.3.46ம் கலால் வரி வசூலிக்கப்படுகிறது. சாதாரண பெட்ரோலை விட பிரீமியம் பெட்ரோலின் விலை அதிகமாக இருந்ததால் அதன் விற்பனை கிட்டத்தட்ட நின்றுவிட்டது. இந்நிலையில் பிரீமியம் பெட்ரோலுக்கான கலால் வரி வெகுவாக குறைக்கப்பட்டுள்ளதால் அதன் வியாபாரம் மீண்டும் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அருண் ஜேட்லியின் அறிவிப்பை அடுத்து பிரீமியம் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.5 குறைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பிரிட்டிஷ் பெட்ரோலியம் கார்பரேஷன் லிமிடெட்டின் பிரீமியம் பெட்ரோல் தற்போது லிட்டருக்கு ரூ. 83.03க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சாதாரண பெட்ரோல் லிட்டருக்கு ரூ.73.55 ஆக உள்ளது.
இந்த விலை குறைப்பு மூலம் பிரீமியம் பெட்ரோலின் விற்பனை அதிகரிக்கக்கூடும்.