தொழில் நிறுவனங்கள் வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய அக்.15 வரை கால அவகாசம்
வருமானவரி தாக்கல் செய்ய கடைசி தேதி செப்டம்பர் 30 என்றிருந்த நிலையில், அக்டோபர் 15 வரையில் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: வருமானவரி தாக்கல் செய்ய தவறியவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கும் வகையில் 15 நாட்கள் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்களும் வருமான வரி மற்றும் தணிக்கையாளர்களின் அறிக்கை (Auditors Report) போன்றவற்றை தாக்கல் செய்வதற்கான காலக் கெடுவை வரும் அக்டோபர் 15ஆம் தேதி வரை நீட்டித்து சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
2017-18 நிதியாண்டிற்கான தனிநபர் மற்றும் மாத ஊதியம் பெறுவோரின் வருமான வரிக் கணக்கை, ஜூலை 31 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியது. பின்னர் காலவரையறை ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
தொழில்நிறுவனங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் வருமான வரித் தாக்கல் செய்ய செப்டம்பர் 30 கடைசி நாள் என்று கூறப்பட்ட நிலையில் மேலும் 15 நாட்கள் அதாவது அக்டோபர் 15 வரை காலக்கெடு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் முதல் சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்டதால், அனைத்து தொழில் துறையினரும் ஜூலை மாதத்திற்கான கொள்முதல், விற்பனை மற்றம் நிகர வரிகளை செலுத்தவேண்டிய ஜிஎஸ்டிஆர்-3பி என்னும் படிவத்தை தாக்கல் செய்வதற்கான நெருக்கடியில் உள்ளனர்.
தொழில் நிறுவனங்களும் வருமான வரி மற்றும் தணிக்கையாளர்களின் அறிக்கை (Auditors Report) போன்றவற்றை தாக்கல் செய்வதற்கான காலக் கெடுவை வரும் அக்டோபர் 15ஆம் தேதி வரை நீட்டித்து சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
2016-17ஆம் ஆண்டுக்கான வருமான வரித் தாக்கலுக்கான காலக்கெடு தேதியை வரும் செப்டம்பர் 30ம் தேதியில் இருந்து வரும் அக்டோபர் 31 வரை ஒரு மாதம் நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
ஜூலை மாதம் முதல் சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்டதால், அனைத்து தொழில் துறையினரும் ஜூலை மாதத்திற்கான கொள்முதல், விற்பனை மற்றம் நிகர வரிகளை செலுத்தவேண்டிய ஜிஎஸ்டிஆர்-3பி என்னும் படிவத்தை தாக்கல் செய்வதற்கான நெருக்கடியில் உள்ளனர். அனைத்து தொழில் நிறுவனங்களும், வரி ஆலோசகர்களும் தணிக்கையாளர்களும் ஜிஎஸ்டி, ஜிஎஸ்டி என்று அலைந்து கொண்டிருப்பதால், வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யவேண்டும் என்ற சிந்தனையே இல்லாமல் இருக்கின்றனர்.
இந்தநிலையில், 2017-18 நிதியாண்டிற்கான வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய செப்டம்பர் 30ம் தேதி முடிவடைவதாக இருந்த கடைசி தேதி, அக்டோபர் 15ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதிலும் வருமான வரி செலுத்தாதவர்களுக்கு ஏற்கனவே கூறியபடி அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.