For Daily Alerts
Just In
வரலாறு காணாத அளவுக்கு அன்னியச் செலாவணி கையிருப்பு- ரிசர்வ் பேங்க் மகிழ்ச்சி
டெல்லி: இந்தியாவின் அன்னியச் செலாவணி கையிருப்பு வரலாறு காணாத அளவு அதிகரித்து 328 பில்லியன் கோடி டாலர்கள் அதாவது 19 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாயை தொட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி மகிழ்ச்சி செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனவரி 30 ஆம் தேதியுடன் முடிந்த வாரத்தில் இந்த உச்ச அளவு எட்டப்பட்டதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது.
சர்வதேச பணச் சந்தையில் ஏற்பட வாய்ப்புள்ள பெரிய ஏற்றத்தாழ்வுகளை கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி அதிகளவு அமெரிக்க டாலர்களை வாங்கியதுதான் இதற்கு முக்கிய காரணமாம்.
மேலும், சர்வதேச பொருளாதார சூழல்களும் இந்த உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. தற்போதுள்ள அன்னியச் செலாவணியைக் கொண்டு 9 மாதத்துக்கான இறக்குமதி செலவுகளை சமாளிக்க முடியும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments
English summary
India's foreign exchange reserves hit a new high of $327.88 billion in the week ended January 30, according to data published by the Reserve Bank of India on Friday. This was a surge of $5.8 billion from the earlier week's tally of $322 billion.