For Quick Alerts
For Daily Alerts
Just In
மின் கட்டண உயர்வு.. தொழில் நிறுவனங்கள் வேறு மாநிலங்களுக்கு போகும் அபாயம்!
கோயம்புத்தூர்: தமிழக அரசின் மின் கட்டண உயர்வால் தொழில் நிறுவனங்கள் வேறு மாநிலங்களுக்கு இடம்பெயரும் அபாயம் இருப்பதாக மின்நுகர்வோர் கூட்டமைப்பின் தலைவர் பால சுந்தரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:
தமிழகத்தில் மின்சாரம் சீராக விநியோகிக்கப்படாத காரணத்தால் தொழில் நிறுவனங்கள் தங்களுக்கான ஆர்டர்களை இழந்துள்ளன. தொடர்ச்சியான மின்வெட்டால் பல தொழில் நிறுவனங்கள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழக அரசு மின் நுகர்வோரை கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக 15% கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இது தொழில் துறையை கடும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது.
இதனால் குறைந்த கட்டணத்துடனும் சீராக மின்சார விநியோகித்தடனும் இருக்கும் மாநிலங்களுக்கு தொழில் நிறுவனங்கள் இடம்பெயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு பாலசுந்தரம் தெரிவித்தார்.
Comments
English summary
President of Electricity Consumer's Welfare Association of Tamil Nadu, Balasundaram said the power tariff hike would result in industries becoming less competitive as their costs will increase. He added that this would result in the industrialists shifting their set-up to other states where the power supply is good and cheap.
Story first published: Monday, December 15, 2014, 15:10 [IST]